செய்திகள்
கும்பகோணத்தில் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்

மாணவி அனிதா தற்கொலை: திருவாரூரில் பள்ளி மாணவர்கள் மறியல்

Published On 2017-09-06 06:00 GMT   |   Update On 2017-09-06 06:01 GMT
திருவாரூர், கும்பகோணத்தில் நீட் தேர்வை கண்டித்து பள்ளி மாணவ- மாணவிகள் மறியல்-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதான மரணத்திற்கு நீதி விசாரணை கோரியும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவாரூர் அருகே உள்ள திருநெய்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே போல் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியிலும் அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

          கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் 3- வது நாளாக வகுப்புகளை     புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

கும்பகோணத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News