செய்திகள்

நீட் தேர்வை வைத்து எதிர்கட்சிகள் அரசியல்: வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

Published On 2017-09-04 10:43 GMT   |   Update On 2017-09-04 10:44 GMT
நீட் தேர்வை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாதாக் கோட்டை சாலையில் உள்ள அன்பு இல்லத்தில் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் அன்னை தெரசா குறித்த 9 நாள் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.இதன் நிறைவு விழா நேற்று இரவு நடந்தது. இதில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற வேண்டும் என்பதற்காக போராடினோம். ஆனால் முடியவில்லை. இருந்த போதிலும் அனிதாவின் இறப்பு தாங்க முடியாத இழப்பு. அனிதாவின் குடும்பத்திற்கு அரசு நிச்சயம் உதவி செய்யும். நீட் தேர்வை வைத்து எதிர் கட்சிகள் அரசியல் செய்ய பார்க்கின்றன.இதற்காக தான் தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News