செய்திகள்
திருவள்ளூர் அருகே வாலிபர் கொலையில் 6 பேர் கைது
திருவள்ளூர் அருகே வாலிபர் கொலையில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் ராகேஷ் (வயது24). கார் டிரைவர்.
கடந்த 27-ந்தேதி அவர் காக்களூர் பைபாஸ் சாலையில் நின்ற போது மர்ம கும்பலால் வெட்டப்பட்டார்.
பலத்த காயம் அடைந்த ராகேஷ் நேற்று முன்தினம் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மோகன், சேட்டு, வேலூரைச் சேர்ந்த நரேஷ், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வேலு, பூந்தமல்லி முகமது ரஹீக், சேட்டு ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
கடந்த ஆண்டு வாலிபால் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.