குடியாத்தத்தில் மதுக்கடைக்கு இடம் கொடுத்தவர் வீட்டில் பெண்கள் முற்றுகை
குடியாத்தம்:
குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டபட்டுள்ளது. இதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதன் அருகே அதிக குடியிருப்புகள் உள்ளன. நெசவு தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். மதுக்கடை திறக்கபட்டால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.அப்பகுதி மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல அச்சபடுவார்கள் என்பதால் மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காளியம்மன்பட்டியில் மதுக்கடை திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை காளியம்மன்பட்டியில் மதுக்கடைக்கு இடம் கொடுத்தவர் வீட்டின் முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள், திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்த போலீசார் சப்-இன்ஸ்பெக்டர்கள் வஜ்ரவேலு, நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மதுக்கடைக்கு இடம் கொடுத்தவர் வீட்டில் இல்லை அவர் வந்தவுடன் இது பற்றி பேச்சுவார்தை நடத்தி தீர்வு காணப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதயைடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.