செய்திகள்
எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை: ரங்கசாமி பேட்டி
திருமுருகன் எம.எல்.ஏ.வுக்கு வேலை இருந்ததால் அவர் முன்னதாகவே வாக்களித்து விட்டார். எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி:
சட்டமன்ற கமிட்டி அறையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். பின்னர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு அதரவு என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். அதன்படி வாக்களித்தோம். திருமுருகன் எம.எல்.ஏ.வுக்கு வேலை இருந்ததால் அவர் முன்னதாகவே வாக்களித்து விட்டார். எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகவே உள்ளோம். ஜனாதிபதி தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.