search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம்நாத் கோவிந்த்"

    • ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும்.

    பாராளுமன்ற மக்களவை, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசலீத்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்களிடம் இந்த குழு ஆலோசனைகளை பெற்று வருகிறது.

    இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும்.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். எனவே மூன்று முறை மட்டுமே அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இரண்டு வகையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்" எனக் கூறினார்.

    • ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில் மத்திய மந்திரி அமித் அஷா, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே.சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுவில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவித்திருந்தார்.

    பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நாட்டின் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் என இந்தியா கூட்டணி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.

    • ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்பட்டது.
    • இந்திய அரசியலமைப்பு மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள முக்கிய துறைகள் ஒரே நிர்வாக அமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தீவிரமாக உள்ளது.

    இதற்காக ஏற்கனவே பல்வேறு துறைகளில் மத்திய அரசு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் முறையை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக கடந்த ஆண்டு முதல் அடிக்கடி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பெரும்பாலான மாநில கட்சிகள் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே காலகட்டத்தில்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் சில மாநிலங்களில் ஆட்சி கலைப்பு மற்றும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழ்ப்பு போன்றவை காரணமாக சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் பாராளுமன்றத்துக்கு ஒரு தடவையும், மாநில சட்டசபைகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் சட்டசபை காலம் முடிவடைவதை பொருத்தும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனி தேர்தல் நடத்தும் போது அதிக செலவு ஏற்படுவதாக கூறப்பட்டது. நிர்வாக ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்து இருக்கின்றன. இதேபோல மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கும்போதும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் இந்த செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்பட்டது. இதையடுத்து இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது பற்றி மத்திய அரசு கடந்த சில மாதங்களாக ஆலோசித்து வந்தது.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய அரசு இந்த விவகாரத்தில் அதிரடியாக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    இந்த குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையிலான குழுவினர் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்வார்கள்.

    இந்த ஆய்வுகளில் தெரியவரும் கருத்துக்களை தொகுத்து மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் இன்று 2-வது நாளாக கூடி முக்கிய முடிவுகளை அறிவிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    ஆனால் அவர்களது சிந்தனையை திசை திருப்பும் வகையில் மத்திய அரசின் இன்றைய நடவடிக்கை அமைந்துள்ளது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக கம்யூனிஸ்டு கட்சியினர் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

    இந்திய அரசியலமைப்பு மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தேர்தல் நடத்துவதில் கடும் குளறுபடிகள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளன.

    குறிப்பாக ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதாக இருந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது முக்கியமாகும். இதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.

    ஆனால் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடக்கும்போது இதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, இடது சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

    • 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பெற்றுள்ளது.
    • சிறந்த வங்கிக்கான விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு தேசிய அளவிலான சிறந்த வங்கிக்கான விருதினை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    கேரள மாநிலம் வங்கி சங்கங்களின் மன்றம் கடந்த 14 ஆண்டுகளாக வங்கிகளின் திறமையான செயல்பாடுகளின் அடிப்படையில் விருது வழங்கி வருகிறது. இதற்காக தலை சிறந்த நடுவர்களை கொண்டு இந்த விருதுக்கு தகுதியான வங்கிகளை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பெற்றுள்ளது.

    இந்த விருது தனியார் துறை வங்கிகளில் பெரிய வங்கிகள் அல்லாத வங்கிகள் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கடந்த 29-ந்தேதி எர்ணாகுளத்தில் நடைபெற்ற விழாவில் இந்த விருதினை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பாடுகள் மற்றும் சேவைகள் துறை பொது மேலாளர் சூரியராஜிடம், தேசிய அளவிலான சிறந்த வங்கிக்கான விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் கூகையில், விருது பெற்ற மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்வதாகவும், விருதுகள் எங்களது வங்கியின் அனைவரையும் சிறப்பாக செயல்பட்டு மேலும் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கிறது என்றார்.

    • மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.
    • சுற்றுலா பயணிகளை ராம்நாத் கோவிந்த் அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    மாமல்லபுரம்:

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார். முன்னதாக கடற்கரை கோயில் நுழைவுவாயில் பகுதியில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், அவருக்கு நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.

    சுற்றுலா பயணிகள் யாரையும் தடுத்து நிறுத்தாமல் ராம்நாத் கோவிந்த், மக்களோடு மக்களாக புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.

    அவரை அடையாளம் கண்ட வடமாநில சுற்றுலா பயணிகள் சிலர் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். அவர்களை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், வருவாய்த்துறை மற்றும் தொல்லியல்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • இந்திய ஜனாதிபதியாக அவர் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்தார்.

    முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது அரசாட்சி மற்றும் தலைமைத்துவத்திற்காக அவர் மதிக்கப்படுகிறார். இந்திய ஜனாதிபதியாக அவர் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழட்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    • ராம்நாத் கோவிந்த் இறுதிக்காலம் வரை டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் வசிக்கலாம்.
    • அவருக்கு மாதம் ரூ.2½ லட்சம் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

    புதுடெல்லி :

    புதிய ஜனாதிபதியாக நேற்று திரவுபதி முர்மு பதவி ஏற்றதை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புதிய பங்களாவுக்கு புறப்பட்டார்.

    டெல்லி ஜன்பத் சாலை 12-ம் எண் முகவரியில் உள்ள பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நீண்ட காலமாக குடியிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவருடைய மகன் சிராக் பஸ்வான் எம்.பி. குடியிருந்தார்.

    மத்திய அரசின் நோட்டீசை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் வீட்டை காலி செய்தார். பின்னர், ராம்நாத் கோவிந்த் ஓய்வுக்கு பிறகு தங்குவதற்காக வீடு தயார் செய்யப்பட்டது.

    அந்த பங்களாவுக்கு ராம்நாத் கோவிந்த் காரில் சென்றார். மரபுப்படி, புதிய ஜனாதிபதியான திரவுபதி முர்முவும் அவருடன் சென்றார்.

    பங்களாவில், மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு, ஹர்தீப்சிங் பூரி, வி.கே.சிங், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ராம்நாத் கோவிந்தை வரவேற்றனர். அதுதொடர்பான புகைப்படத்தை கிரண் ரிஜிஜு, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.,

    ஜனாதிபதி ஊதியம் மற்றும் ஓய்வூதிய சட்டப்படி, ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கும். மாத ஊதியத்தில் 50 சதவீதம், அதாவது ரூ.2½ லட்சம் அவருக்கு மாத ஓய்வூதியமாக கிடைக்கும்.

    தனது இறுதிக்காலம்வரை டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் அவர் வசிக்கலாம். அவருக்கு ஒரு தனி செயலாளர், ஒரு கூடுதல் தனி செயலாளர், ஒரு தனி உதவியாளர், 2 பியூன்கள் ஆகியோர் ஒதுக்கப்படுவார்கள். அலுவலக செலவாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

    இலவச மருத்துவ உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும். விமானம், ரெயில், கப்பல் ஆகியவற்றில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் உயர் வகுப்பில் பயணம் செய்யலாம். 2 தொலைபேசிகள் (அகண்ட அலைவரிசை இணைப்புக்காக ஒன்று உள்பட), தேசிய ரோமிங் வசதியுடன் செல்போன், ஒரு கார் அல்லது கார் வைத்துக்கொள்வதற்கான படிகள் ஆகியவை வழங்கப்படும்.

    ஒருவேளை, அவர் ஏற்கனவே துணை ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஓய்வுபெற்ற துணை ஜனாதிபதிக்கான சலுகைகள் எதுவும் அளிக்கப்படாது.

    ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் வாழ்க்கை துணைக்கும் நிறைய சலுகைகள் உண்டு. அவருக்கு டெல்லியில், வாடகை இன்றி பங்களா ஒதுக்கப்படும். அதற்கான பராமரிப்பு செலவும் அளிக்கப்படும்.

    ஓய்வுபெற்ற ஜனாதிபதி பெற்றதில் 50 சதவீத தொகை, அவருக்கு மாத ஓய்வூதியமாக வழங்கப்படும். இறுதிக்காலம்வரை மருத்துவ சிகிச்சை உண்டு. தனி செயலாளர், பியூன் ஆகியோருடன் அலுவலக செலவாக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம்வரை கிடைக்கும்.

    ஒரு இலவச தொலைபேசி, கார் ஆகியவையும், ஒரு நபரை துணைக்கு வைத்துக்கொண்டு, ஆண்டுக்கு 12 தடவை இந்தியாவில் உயர்வகுப்பு பயணமும் செய்யலாம்.

    • நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன்.
    • எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்றுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெறும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    5 வருடங்களுக்கு முன்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உங்களுக்கும் உங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த ராம்நாத் கோவிந்த், இன்று நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன்.

    ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எனது சொந்த கிராமத்திற்குச் சென்றதும், எனது கான்பூர் பள்ளியில் உள்ள வயதான ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவதும் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும்.

    நமது வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு. இளைய தலைமுறையினர் தங்கள் கிராமம் அல்லது நகரம் மற்றும் அவர்களின் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர நான் கேட்டுக்கொள்கிறேன்.

    எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்.

    நமது இயற்கை ஆழ்ந்த வேதனையில் உள்ளது. காலநிலை நெருக்கடி இந்த கிரகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். நமது குழந்தைகளின் நலனுக்காக நமது சுற்றுச்சூழல், நிலம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    நமது அன்றாட வாழ்க்கையில் மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதல் குடிமகனாக, சக குடிமக்களுக்கு நான் ஒரு அறிவுரை கூற வேண்டும் என்றால், அது இதுவாகதான் இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
    • ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

    ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

    • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
    • நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி, வானொலி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.

    புதுடெல்லி:

    நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரது பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் நாளை வெளியேறுகிறார்.

    இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். நாளை இரவு 7.00 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் உரையாற்றவுள்ள அவர், பதவிக்காலத்தில் தாம் வகித்த பொறுப்புகள், தான் கடந்து வந்த பாதை என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவரிப்பார் என தெரிகிறது.

    • இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர்.
    • மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர். மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

    நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.

    ஜனநாயகத்தின் கோயிலாக பாராளுமன்றம் திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசவேண்டும்.

    கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து நாடு சிறப்பாகக் கையாண்டது.

    மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தினோம்.

    திரவுபதி முர்மு பெண்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் என தெரிவித்தார்.

    ×