search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு தேசிய அளவிலான சிறந்த வங்கி விருது- முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
    X

    விருது வழங்கப்பட்டபோது எடுத்த படம்.

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு தேசிய அளவிலான சிறந்த வங்கி விருது- முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

    • 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பெற்றுள்ளது.
    • சிறந்த வங்கிக்கான விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு தேசிய அளவிலான சிறந்த வங்கிக்கான விருதினை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    கேரள மாநிலம் வங்கி சங்கங்களின் மன்றம் கடந்த 14 ஆண்டுகளாக வங்கிகளின் திறமையான செயல்பாடுகளின் அடிப்படையில் விருது வழங்கி வருகிறது. இதற்காக தலை சிறந்த நடுவர்களை கொண்டு இந்த விருதுக்கு தகுதியான வங்கிகளை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பெற்றுள்ளது.

    இந்த விருது தனியார் துறை வங்கிகளில் பெரிய வங்கிகள் அல்லாத வங்கிகள் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கடந்த 29-ந்தேதி எர்ணாகுளத்தில் நடைபெற்ற விழாவில் இந்த விருதினை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பாடுகள் மற்றும் சேவைகள் துறை பொது மேலாளர் சூரியராஜிடம், தேசிய அளவிலான சிறந்த வங்கிக்கான விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் கூகையில், விருது பெற்ற மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்வதாகவும், விருதுகள் எங்களது வங்கியின் அனைவரையும் சிறப்பாக செயல்பட்டு மேலும் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கிறது என்றார்.

    Next Story
    ×