செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன்

வேலைப்பளு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

Published On 2017-06-23 09:43 GMT   |   Update On 2017-06-23 09:43 GMT
வேலைப்பளு காரணமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மாதவரம்:

கொளத்தூர் வெற்றிவேல் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (56). இவர் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் இறந்து விட்டார். அதனால் மனஉளைச்சலில் இருந்தார். அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாகவும் அவதிப்பட்டார். இதனால் அவரது மன உளைச்சல் அதிகரித்தது.

இதனால் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். அங்கு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை பார்த்த போது அவர் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனின் மனைவி பெயர் ஜெயந்தி. இவர்களுக்கு நரேந்திரன், முத்துசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர்.



Tags:    

Similar News