செய்திகள்

மு.க.ஸ்டாலின் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார்: அமைச்சர் சீனிவாசன் பேச்சு

Published On 2017-05-01 12:20 GMT   |   Update On 2017-05-01 12:20 GMT
மு.க. ஸ்டாலின் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார் என்று அமைச்சர் சீனிவாசன் பேசினார்.

பழனி:

பழனி நகர அ.தி.மு.க. அம்மா அணி சார்ப்ல் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பழனியில் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

நம் கட்சியின் 50 மாவட்ட செயலாளர்களில் 48 பேரும், 122 எம்.எல்.ஏ.க்கள், 35 எம்.பி.க்கள் நம்முடன் உள்ளனர். வெறும் 10 பேர் சேர்ந்து விட்டால் தனி அணி ஆகிவிடாது. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தான் நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்குகிறோம். தவறான நோக்கம் இல்லை.

நம்மிடம் உள்ள பிரிவை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அ.தி.மு.க.வில் ஒரு குண்டூசியை கூட தி.மு.க. எடுக்க முடியாது. பிரிந்து சென்றவர்களுடன் பேச தயாராக உள்ளோம். எம்.எல்.ஏக்கள் விலைபோய் விட்டதாக கூறுவது தவறு. நம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News