விளையாட்டு
ஷர்துல் தாகூர்

7 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஷர்துல் தாகூர் - 229 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

Published On 2022-01-04 14:48 GMT   |   Update On 2022-01-04 14:48 GMT
தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீன் பீட்டர்சன் 62 ரன்களும், டெம்பா பவுமா 51 ரன்களும் எடுத்தனர்.
ஜோகன்னஸ்பர்க்:

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.



இன்று தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பீட்டர்சன் 62 ரன்களும், டெம்பா பவுமா 51 ரன்களும் எடுத்தனர். இந்த இன்னிங்சில் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அவர் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7  விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2ம் இன்னிங்சை ஆடி வருகிறது.
Tags:    

Similar News