செய்திகள்
விராட் கோலி

நாங்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் - விராட்கோலி

Published On 2019-07-11 07:41 GMT   |   Update On 2019-07-11 07:41 GMT
உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் நாங்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர்:

இந்தியா அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியதால் நாடு முழுவதும் ரசிகர்கள் சோகம் அடைந்து உள்ளனர்.

இந்த தோல்வியால் நாங்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து உள்ளோம் என்று கேப்டன் விராட்கோலி ரசிகர்களுக்கு அனுப்பி உள்ள தகவலில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

அனைத்து ரசிகர்களுக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மைதானத்துக்கு திரண்டு வந்து அதரவு அளித்ததற்காக நான் இதை தெரிவிக்கிறேன்.

இந்தப் போட்டித் தொடர் எங்கள் நினைவுகளில் மறக்க இயலாத ஒன்றாகும்.

இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அரை இறுதியில் ஏற்பட்ட தோல்வியால் நாங்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். நீங்கள் உங்களது உணர்வுகளை ஷேர் செய்து பரப்புங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தோல்வி குறித்து விராட்கோலி கூறும்போது, 45 நிமிடம் மோசமான ஆட்டம் எங்கள் கதையை முடித்து விட்டது. நியூசிலாந்து வீரர்கள் மிகவும் அபாரமாக பந்து வீசினார்கள். ஜடேஜா, டோனி கடுமையாக போராடினார்கள் என்றார்.

டோனியின் ரன் அவுட் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News