செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட்: 9 அணி கேப்டன்களுடன் விராட் கோலி சந்திப்பு

Published On 2019-05-24 08:14 GMT   |   Update On 2019-05-24 08:14 GMT
உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள மற்ற 9 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சந்தித்து உரையாற்றினார்.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளும் இங்கிலாந்து சென்றடைந்துள்ளன.



தற்போது பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்ற 9 அணிகளின் கேப்டன்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுடன் சம்பிரதாயம் முறையாக கைக்குலுக்கினார்.
Tags:    

Similar News