செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பேடி அப்டன் நியமனம்

Published On 2019-01-13 14:14 GMT   |   Update On 2019-01-13 14:14 GMT
ஐபிஎல் 2019 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பேடி அப்டன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #IPLSeason2019 #RR
ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்குகிறது. 8 அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன. பொதுத்தேர்தல் நடைபெற்றாலும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளதால் அணி உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒவ்வொரு அணிகளும் வீரர்களை தேர்வு செய்துள்ள நிலையில் பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்-களை நியமித்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேடி அப்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இதற்கு முன் 2012 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணியில் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தலைமை பயிற்சியாளராக பணிபுரிய இருக்கிறார். 2012-ல் புனே வாரியர்ஸ் அணியிலும், 2016 மற்றும் 2017-ல் டெல்லி அணியிலும் பணிபுரிந்துள்ளார். பிக் பாஷ் தொடரிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.
Tags:    

Similar News