search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் ராயல்ஸ்"

    • நேற்று நடைபெற்ற கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சுனில் நரைன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்
    • இதன் மூலம் 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார்

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உள்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.

    இதன் மூலம் பகுதி நேர பேட்ஸ்மேனான சுனில் நரேன் இந்த சீசனில் விராட் கோலி (361), ரியன் பாராக (284) ஆகியோருக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை நெருங்கி வருகிறார்.

    இந்நிலையில் தம்முடைய முதல் சதத்திற்கும் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடுவது குறித்தும் சுனில் நரேன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு போட்டியிடுவீர்கள் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் அதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக ஓப்பனிங்கில் விளையாடவில்லை. இருப்பினும் அணிக்கு மீண்டும் வந்துள்ள கௌதம் கம்பீர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்.

    இந்த தொடரில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார். எனவே 14 போட்டிகளிலும் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு சிறந்த துவக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய வேலையாகும்" என்று கூறினார்.

    • 9-வது விக்கெட்டுக்கு பட்லர்- ஆவேஷ் கான் ஜோடி 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
    • இதில் ஆவேஷ் கான் 0 ரன் எடுத்திருந்தார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 223 ரன்கள் குவித்தது.

    இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20-வது ஓவர் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

    ராஜஸ்தான் அணி 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது பட்லருடன் ஆவேஷ் கான் ஜோடி சேர்ந்தார். இறுதிவரை களத்தில் இருந்த ஆவேஷ் கான் ஒரு பந்து கூட சந்திக்காமல் கடைசி வரை களத்தில் அவுட் ஆகாமல் இருந்தார். ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பட்லர் பார்த்துக் கொண்டு ஆடினார்.

    9-வது விக்கெட்டுக்கு இவர்களது பார்ட்னர்ஷிப் 38 ரன்கள் ஆகும். இதில் ஆவேஷ் கான் 0 ரன் எடுத்திருந்தார்.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறைக்கு வீரர்கள் சென்றனர். அந்த வகையில் ஆவேஷ் கானுக்கு சென்றார். அப்போது அவருக்கு ராஜஸ்தான் அணி சார்பில் மாஸ் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.
    • ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும்.

    கொல்கத்தா:

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் களம் இறங்கினார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் கடைசி வரை களத்தில் தனி நபராக நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

    தொடக்கத்தில் மெதுவாக பட்லர் விளையாடினார். முதல் 6 ஓவரில் 12 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார்.

    ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அதே நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் பட்லர் ஸ்டிரைக்கை தக்க வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    மறுமுனையில் இருந்த ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பார்த்துக் கொண்டு புத்தி சாலித்தனமாக ஆடினார். தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.

    ஐ.பி.எல். போட்டியில் பட்லர் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அவரது 2-வது சென்சுரி ஆகும் ஐ.பி.எல்.லில் அதிக சதம் அடித்த வீரர்களில் பட்லர் 2-வது இடத்தில் உள்ளார். கோலி 8 சென்சுரியுடன் முதல் இடத்திலும் கிறிஸ் கெய்ல் 6 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும். அவர் கிறிஸ் கெய்ல் (22 சதம்), பாபர் ஆசம் (11), விராட்கோலி (9), ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.

    கடைசி 6 ஓவரில் ராஜஸ்தான் 96 ரன் எடுத்தது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு அந்த அணி பஞ்சாப்புக்கு எதிராக கடைசி 6 ஓவரில் 92 ரன் எடுத்தது.

    இதே போல கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைனும் சதம் அடித்து சாதனை புரிந்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போய் விட்டது.

    • ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் சதம் அடித்து அசத்தினார்.
    • கொல்கத்தா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உல்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.

    அந்த பட்டியல்:-

    107 & 3/21 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக பஞ்சாப், பெங்களூரு, 2011

    175* & 2/5 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக புனே, பெங்களூரு, 2013

    104* & 2/38 - ஷேன் வாட்சன் (ஆர்ஆர்) எதிராக கேகேஆர், பிரபோர்ன், 2015

    106 & 1/13 - ஷேன் வாட்சன் (சிஎஸ்கே) எதிராக ஆர்ஆர், புனே, 2018

    109 & 2/30 - சுனில் நரைன் (கேகேஆர்) எதிராக ஆர்ஆர், கொல்கத்தா, 2024

    • முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது.
    • கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய 31-வது லீக் போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும்.

    அதைத் தொடர்ந்து 224 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 19 (9) ரன்னில் அவுட்டாகினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    அதனை தொடர்ந்து பட்லர் -ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்து. அதிரடியாக விளையாடி ரியான் பராக் 34 ரன்களில் அவுட்டாகினார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0, ரோவ்மன் போவல் 26, ரன்களில் அவுட்டாகினர்.

    இருப்பினும் தொடர்ந்து ஒற்றை ஆளாக நின்ற பட்லர் கொல்கத்தா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அபாரமான சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 107* (60) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ராஜஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (224) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் அணி சமன் செய்தது. இதற்கு முன் 2020 சீசனில் பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
    • ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பாக ஆடினார். அடுத்து வந்த ஆங்ரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 11 ரன்களில் நடையை கட்டினார்.

    பிறகு நரைனுடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரசல் ரன் குவிப்பில் ஈடுபட்டார். போட்டி முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில் 19 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ரியான் பராக் தன் பங்கிற்கு 34 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.

    அடுத்தடுத்து வந்த துருவ் ஜூரெல், அஸ்வின் மற்றும் ஹெட்மையர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், துவக்கத்தில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். இவருடன் போவெல் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

    போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் ஹர்ஷித் ரானா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வைபவ் அரோரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கொல்கத்தா அணியின் சுனில் நரைன் சதம் அடித்தார்.
    • ஆவேஷ் கான் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பாக ஆடினார். அடுத்து வந்த ஆங்ரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 11 ரன்களில் நடையை கட்டினார்.

    பிறகு நரைனுடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரசல் ரன் குவிப்பில் ஈடுபட்டார். போட்டி முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடி சதம் அடித்த சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்களை குவித்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • ஒரே போட்டியில் தோல்வியை தழுவியது.
    • புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரே போட்டியில் தோல்வியை தழுவி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரே போட்டியில் தோல்வியை தழுவியது.

    இரு அணிகளும் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரே தோல்வியை தழுவியுள்ளன. அந்த வகையில், இரு அணிகளும் வெற்றியை தொடரும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.

    • இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
    • ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் காயத்தால் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    5 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 4 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோவுக்கு எதிராக) ஒரு தோல்வி (சென்னைக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் உள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன் இலக்கை கொல்கத்தா 15.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. அதில் விக்கெட் கீப்பர் பில்சால்ட் 89 ரன்கள் நொறுக்கினார். அந்த அணியில் சால்ட், சுனில் நரின், ஸ்ரேயாஸ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கும் நல்ல நிலைக்கு திரும்பி விட்டார். சொந்த ஊரில் ஆடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமாகும். இந்த சீசனில் உள்ளூரில் ஆடியுள்ள 2 ஆட்டத்திலும் கொல்கத்தா வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு தொடரில் 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளை தோற்கடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் காயத்தால் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார்களா என்பது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் சாம்சன், ரியான் பராக், ஜெய்ஸ்வால், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் என்று நட்சத்திர வீரர்களுடன் ராஜஸ்தான் வலுவாகவே உள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ராஜஸ்தானும், 14-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டில் வருமாறு:-

    கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங் அல்லது ரமன்தீப்சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், தனுஷ் கோடியன் அல்லது பட்லர், சஞ்சு சாம்சன் (ேகப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ெஹட்மயர், ரோமன் பவெல், குல்தீப் சென் அல்லது ேகஷவ் மகராஜ், டிரென்ட் பவுல்ட், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
    • பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.

    நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...

    ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.

    பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

    தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

    இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.

    பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    • கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தில் ஹெட்மையர் ரன் எடுக்கவில்லை.
    • 3-வது மற்றும் 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.

    பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஜித்தேஷ் சர்மா (24 பந்தில் 29 ரன்), லிவிங்ஸ்டன் (14 பந்தில் 21 ரன்), இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா (16 பந்தில் 31 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக விளையாடினார். அதேசமயம் ரபடா அபாரமாக பந்து வீச ராஜஸ்தான் அணியால் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆகவே, தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்து கொண்டே சென்றது.

    பவர் பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 9-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. கோட்டியன் 31 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. சாம்சன் 14 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி 6 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. 15 மற்றும் 16-வது ஓவரில்களில் முறையே 9 மற்றும் 6 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் ரியான் பராக் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.

    கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் ஜுரேல் 11 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 17.2 ஓவரில் 115 ரன்கள் எடுத்து நெருக்கடிக்கு உள்ளாகியது.

    16 பந்துக்கு 33 ரன்கள் என்ற நிலையில் ஹெட்மையர் உடன் ரோவன் பொவேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹெட்மையர் பவுண்டரிக்கு விரட்டியதுடன், கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். இதனால் 18-வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பொவோல் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 9 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி 3 பந்தில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ராஜஸ்தான் 19-வது ஓவரில் 10 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்ஷ்தீப் பந்து வீச ஹெட்மையர் எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளில் ஹெட்மையர் ரன்ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ஹெட்மையர்.

    இதனால் கடைசி 3 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் 2 ரன் அடித்த ஹெட்மையர் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.5 ஓவரில் 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும் அடித்தனர்.
    • இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

    பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் தவான் விளையாடவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வை செய்தார். அதன்படி பஞ்சாப் அணியின் அதர்வா தைடே, பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதர்வா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்.

    பவர் பிளேயில் பஞ்சாப் அணி 38 ரன்கள் எடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 14 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பேர்ஸ்டோ 19 பந்தில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி சரிவை நோக்கிச் சென்றது.

    கேப்டன் சாம் கர்ரன் 10 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 120 ரன்னை தாண்டுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    ஆனால் ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும், இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    ×