செய்திகள்

ஐபிஎல் தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்- விராட் கோலி வேண்டுகோள்

Published On 2018-11-09 08:20 GMT   |   Update On 2018-11-09 08:20 GMT
உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும் என விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். #ViratKohli
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது. இப்போட்டிக்கு தயாராவது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் விராட் கோலி பேசும்போது, அடுத்தடுத்த தொடர்களால் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சோர்வடைவார்கள். இதனால் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக நடக்கும் ஐபிஎல் போட்டி தொடரில் இருந்து முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.



அவர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது சிறந்த முடிவாக இருக்கும். இல்லையென்றால் 7 அல்லது 8 போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
Tags:    

Similar News