செய்திகள்
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு நிச்சயம் இடம் உண்டு- ரகானே
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Rahane
புவனேஸ்வரில் நடைபெற்ற எகம்ரா விளையாட்டு இலக்கிய விழாவில் ரகானே கலந்து கொண்டார். அப்போது ரகானேவிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன். இதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இதற்காகத்தான் நான் விஜய் ஹசாரோ மற்றும் தியோதர் டிராபி தொடரில் விளையாடினேன்.
இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போனது. நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். நாங்கள் சிறந்த அணியாக உள்ளதால், வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன். இதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இதற்காகத்தான் நான் விஜய் ஹசாரோ மற்றும் தியோதர் டிராபி தொடரில் விளையாடினேன்.
இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போனது. நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். நாங்கள் சிறந்த அணியாக உள்ளதால், வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.