செய்திகள்

இந்தியா புதிய சாதனை: முதல் 3 வீரர்கள் 364 ரன் குவிப்பு

Published On 2017-12-14 07:05 GMT   |   Update On 2017-12-14 07:06 GMT
இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முதல் 3 இந்திய வீரர்கள் 364 ரன் குவித்து சாதனை படைத்துள்ளனர்.
மொகாலி மைதானத்தில் முதல் 3 இந்திய வீரர்கள் 364 ரன் (ரோகித்சர்மா208+ தவான் 68+ ஷிரேயிஸ் அய்யர் 88) குவித்து சாதனை புரிந்தனர். இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் முதல் 3 இந்திய வீரர்கள் 343 ரன் (கங்குலி 4 + தெண்டுல்கர் 186 + டிராவிட் 153) எடுத்ததே சாதனையாக இருந்தது.



சர்வதேச அளவில் 3-வது சிறந்த நிலையாகும். முதல் 3 வீரர்கள் ரன் குவிப்பில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்திலும் (430 ரன்), நியூசிலாந்து 2-வது இடத்திலும் (386 ரன்) உள்ளது.
Tags:    

Similar News