இந்தியா

இது எப்படி சாத்தியம்? - சிறுமியின் ஓவியத்திறனால் திகைத்துப்போன ஆனந்த் மஹிந்திரா

Published On 2022-10-27 08:18 GMT   |   Update On 2022-10-27 09:37 GMT
  • ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் நாட்டின் முக்கிய தலைவர்கள் 15 பேரின் உருவங்களை ஓவியங்களாக வரைந்து அசத்திய நூர்ஜஹான் என்ற சிறுமியை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார். இது எப்படி சாத்தியமாகும் என்றும் அவர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இது எப்படி சாத்தியமாகும். இதன் மூலம் இவர் ஒரு திறமையான கலைஞர் என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது கலையை விட மேலானது- இது அசாத்தியமான ஒன்று! சிறுமி வசிக்கும் இடம் அருகில் உள்ள யாராவது இந்த சாதனையை உறுதிப்படுத்த முடியுமா? இது உண்மை என்றால், அவள் கண்டிப்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும். அவருக்கு உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News