இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா... பாதிப்பு 4ஆயிரத்தை தாண்டியது
- கேரளாவில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்றுப் பரவலால் கேரள மக்கள் அச்சமடைய வேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் உருமாற்றத்தில் உருமாற்றம் அடைந்த JN.1 வகை கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,054ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4,50,09,248 (4.50 கோடி) ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,860 (4.44 கோடி) ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுப் பரவலால் கேரள மக்கள் அச்சமடைய வேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.