இந்தியா

கடந்த 5 ஆண்டுகளில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்ட 324 வழக்குகள்

Published On 2023-12-20 11:01 GMT   |   Update On 2023-12-20 11:04 GMT
  • கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு 324 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது.
  • தரவுகளின்படி, இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை மொத்தம் 15 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி நித்யானந் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு 324 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம்.

2018, டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் இந்த 324 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தரவுகளின்படி, இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை மொத்தம் 15 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து 2022-ல் 31, 2021-ல் 15, 2020-ல் 9 மற்றும் 2019-ல் 14 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை மொத்தம் 15 குற்றம் சாட்டப்பட்டவர்கள், 2022-ல் 30 பேர், 2021-ல் 15 பேர், 2020-ல் 9 பேர் மற்றும் 2019-ல் 12 பேர் குற்றவாளிகள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News