இந்தியா

பாதுகாப்பு பணியில் படைவீரர்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளன - மத்திய அரசு

Published On 2022-07-20 23:57 GMT   |   Update On 2022-07-20 23:57 GMT
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளது.
  • காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து குறைந்துள்ளன.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டு 417 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. இது கடந்த 2019-ல் 255 ஆகவும், 2020-ல் 244 ஆகவும், 2021-ல் 229 ஆகவும் குறைந்துள்ளன.

கடந்த 2018-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 91 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 80 ஆகவும், 2020-ல் 62 ஆகவும், 2021-ல் 42 ஆகவும் குறைந்துள்ளது.

2018-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டனர். இது 2019-ல் 39 ஆகவும், 2020-ல் 37 ஆகவும், 2021-ல் 41 ஆகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News