இந்தியா
கைது

டெல்லியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

Published On 2022-05-10 07:56 GMT   |   Update On 2022-05-10 07:56 GMT
ஆக்கிமிப்பு அகற்றத்துக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. முகேஷ் அஹ்லாவத் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரை மங்கோல்புரி போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:

டெல்லி மங்கோல்புரியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் புல்டோசர்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடைபெற்றது.

ஆக்கிமிப்பு அகற்றத்துக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. முகேஷ் அஹ்லாவத் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தார். இதை தொடர்ந்து மங்கோல்புரி போலீசார் எம்.எல்.ஏ.வை கைது செய்தனர்.
Tags:    

Similar News