இந்தியா

பாராளுமன்ற தேர்தல்: ஆறாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நிறைவு

Published On 2024-05-23 12:35 GMT   |   Update On 2024-05-23 12:35 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
  • ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆறாம் கட்டமாக நாளை மறுதினமும், 7வது கட்டமாக ஜூன் 1-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆறாம் கட்ட வாக்குப் பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் 20 வேட்பாளர்களும் இதில் அடங்குவர்.

உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், அரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர்.

Tags:    

Similar News