இந்தியா
சத்ய பிரதா சாகு

இந்தியாவின் சிறந்த தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு தேர்வு

Published On 2022-01-23 08:31 GMT   |   Update On 2022-01-23 08:31 GMT
ஜனவரி 25-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் சத்யபிரதா சாகுவிற்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
புது டெல்லி:

மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. 

இந்த தேர்தல்களை சரியாக நடத்தி முடிக்க மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளை தேசிய தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது. 

இந்நிலையில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மாநில தேர்தல் அதிகாரியாக தமிழக மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்துள்ளது.

ஜனவரி 25-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் சத்யபிரதா சாகுவிற்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
Tags:    

Similar News