இந்தியா
கைது

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

Published On 2022-01-15 06:13 GMT   |   Update On 2022-01-15 06:13 GMT
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.

ஸ்ரீநகர்:

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் குஜிபோரா ஜைனாபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார் கள்.

Tags:    

Similar News