இந்தியா

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வாக்குகோரும் இந்தியா கூட்டணி: பிரதமர் மோடி தாக்கு

Published On 2024-04-25 11:40 GMT   |   Update On 2024-04-25 11:40 GMT
  • இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது.
  • அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை.

பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆன்லாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை. அமைப்புகள் மற்றும் அலுவலங்கள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்கள்.

பிறப்படுத்தப்பட்டோர் அல்லது தலித் குடும்பத்தை சேர்ந்த இருவர் வேலை செய்தால், அவர்கள் அதில் ஒருவர் வேலையை பறித்து, நாட்டின் வளத்தின் முதல் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என யாரை குறிப்பிட்டார்களோ அவர்களுக்கு வழங்குவார்கள்" என்றார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் வளங்களில் முதல் உரிமை கோரலை பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியதை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News