இந்தியா
மீட்பு பணி

பாலத்தில் இருந்து ஓடையில் விழுந்த பேருந்து- 5 பெண்கள் உட்பட 9 பேர் பலி

Published On 2021-12-15 12:33 GMT   |   Update On 2021-12-15 12:33 GMT
ஆந்திரா மாநிலத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
விசாகப்பட்டினம்:

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஓடையில் விழுந்தது. ஜங்காரெட்டிகுடம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 22 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த பேருந்தில் மொத்தம் 47 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News