செய்திகள்
உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு நினைவு பரிசு வழங்கிய பஞ்சாப் முதல்வர்

உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பஞ்சாப் முதல் மந்திரி சந்திப்பு

Published On 2021-10-05 18:18 GMT   |   Update On 2021-10-05 18:18 GMT
பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர்சிங் கடந்த சில தினங்களுக்கு முன் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்பூசல் காரணமாக அமரீந்தர் சிங் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல் மந்திரியாக சரண்ஜித்சிங் சன்னி பதவியேற்றார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தன் பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித்சிங், உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் விதத்தில் பஞ்சாப் எல்லையை மூடும் விஷயத்தில் உள்துறை தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார் என பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News