செய்திகள்
பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க., காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா

பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க., காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா

Published On 2021-07-23 18:19 GMT   |   Update On 2021-07-23 18:19 GMT
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது.  இக்கூட்டத் தொடரில் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் விவகாரம் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இப்பிரச்சினை குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்ற்ன.  கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் முடங்கி உள்ளது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.தர்ணாவில் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News