செய்திகள்
ராக்கெட் தாக்குதலில் பலியான சவுமியா

இஸ்ரேலில் குண்டுவீச்சில் பலியான கேரள நர்சு சவுமியா உடல் இன்று இந்தியா வந்தது

Published On 2021-05-15 07:47 GMT   |   Update On 2021-05-15 07:47 GMT
டெல்லி விமான நிலையத்திற்கு வந்த நர்சு சவுமியா உடலை மத்திய வெளியுறவுதுறை இணை மந்திரி முரளிதரன் பெற்றுக்கொண்டார்.
திருவனந்தபுரம்:

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ஹாமாஸ் அமைப்பின் ராக்கெட் வீச்சு தாக்குதலில் இஸ்ரேல் ஜெருசலேம் பகுதியில் மூதாட்டி ஒருவரை பராமரித்து வந்த கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த நர்சு சவுமியா சந்தோஷ் பலியானார்.

அவரது உடல் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு டெல்அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவது உடல் விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்த நர்சு சவுமியா உடலை மத்திய வெளியுறவுதுறை இணை மந்திரி முரளிதரன் பெற்றுக்கொண்டார். சவுமியா உடல் இன்று மதியம் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொள்கின்றனர்.

Tags:    

Similar News