என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Israel"
- லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிதி இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்.
- முக்கியமான மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு உதவி வரும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி தொடர்பான நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் நிதியை பதுக்கி வைத்திருந்த ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த பதுங்கு குழியில் பணம், தங்கம் என மொத்தமாக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் சுமார் 4201 கோடி ரூபாய்) அளவிற்கு நிதி இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் பணம் மற்றும் தங்கம் வைத்துள்ள பதுங்கு குழியில் தாக்குதல் நடத்தவில்லை. இது ஹசன் நசர்ல்லாவின் பதுங்கு குழியாகும். இது பெய்ரூட்டின் இதயம் எனக் சொல்லக்கூடிய முக்கியமான அல்-சஹல் மருத்துவமனையின் நேர் கீழாக உள்ளது. லெபனான் மறுகட்டமைப்பிற்காக இந்த பணம் உதலாம் என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிஸ்புல்லாவிற்கு தொடர்புடைய 30 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
"Tonight, I am going to declassify intelligence on a site that we did not strike—where Hezbollah has millions of dollars in gold and cash—in Hassan Nasrallah's bunker. Where is the bunker located? Directly under Al-Sahel Hospital in the heart of Beirut."Listen to IDF Spox.… pic.twitter.com/SjMZQpKqoJ
— Israel Defense Forces (@IDF) October 21, 2024
கடந்த வருடம் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. காசா மீது போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் வடக்குப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவதுதான் இலக்கு என இஸ்ரேல் அறிவித்து, ஹிஸ்புல்லாவிற்கு எதிராக அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது.
- பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை.
- இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை பெயரளவில் கண்டித்தாலும் இந்த விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்தவே பாலஸ்தீனத்திற்கு பதிலாக இஸ்ரேல் நாட்டை இந்திய அரசு ஆதரித்து வருகிறது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சி.எச்.கனராம் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், "இஸ்ரேல் மற்றும் நம் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்களும் உடன் பிறந்தவர்கள் போன்றவர்கள். இருவரில் ஒருவரின் பெயர் சியோனிஸ்டுகள் மற்றொருவரின் பெயர் சங் பரிவார். இந்த 2 பேருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா சபையில் உள்ள பெரும்பாலான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா போன்ற சில நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.
இதில் மகத்தான வரலாற்றை கொண்ட நம் நாடு எங்கே இருக்கிறது? இப்பிரச்சனையில் ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நாம் நடுநிலைமை வகிக்கிறோம். நாம் பாலஸ்தீனத்தின் பக்கம் இல்லை. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரும் குழுவில் நாம் இல்லை. அதன் பொருள் நாம் இஸ்ரேல் பக்கம் நிற்கிறோம்.
இத்தாலி போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்தாலும், இந்தியா இன்னும் அதை நிறுத்தவில்லை. இஸ்ரேலுடன் அதிக ஆயுத வியாபாரம் செய்யும் நாடு இந்தியா தான். இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது
பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை. 2 தரப்பினரிடமும் போதுமான ஆயுதங்கள் இருந்தால் தான் அதை போர் என்று அழைக்க முடியும். இஸ்ரேல் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள், இது ஒருதலைபட்சமான தாக்குதல்" என்று தெரிவித்தார்.
- இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது.
- அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்துகின்றனர்.
நேதன்யாகு வீடு
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் தற்போது லெபனான் மீதும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதும் தாக்குதலை தொடர்கிறது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதன் எதிரொலியாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா பகுதியில் உள்ள பிரதமர் நேதன்யாகு வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல் நடத்தியது.
சூளுரை
இதில் உயர் தப்பிய நேதன்யாகு ஹிஸ்புல்லாவை அழித்திழிக்க சூளுரை செய்துள்ளார். அதன்படி லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு பணபலம் கொடுக்கும் அல் குவார்த் அல் - ஹசன் என்ற பொருளாதார பிரிவு உள்ளிட்ட முக்கிய இலக்குகளை தாக்க உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே அந்த இலக்குகளுக்கு அருகில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
அல் குவார்த் அல் - ஹசன்
அல் குவார்த் அல் - ஹசன் மூலமே ஹிஸ்புல்லாவுக்கு ஈரானிடம் இருந்தும், மக்கள் நன்கொடையாகவும் வரும் பணம் பரிவர்த்தனை செய்யபடுகிறது. இதன்மூலமே தங்களின் ஆயுத தேவைகளை ஹிஸ்புல்லா பூர்த்தி செய்கிறது. குறிப்பாக இந்த அல் குவார்த் வழக்கும் பொருளாதார சேவைகளை பல லெபனானிய மக்களும் பயன்படுத்தி வருவதால் இதன் மீதான தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
தலைமையகம்
இதற்கிடையே லெபனானின் பெய்ரூட் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உளவுப்பிரிவு தலைமையகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது நடத்திய தாக்குதலில், அதன் முக்கிய அதிகாரிகள் எல்ஹாக் அப்பாஸ் சலாமே, ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அகமது அலி ஹசின் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர்.
100 ராக்கெட்
மேலும் நிலத்திற்கு அடியில் செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலை ஒன்றும் சேதமடைந்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு, பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு 100 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் தாக்குதலால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தி ரகசியங்களை திருடியது.
- ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறது
பாலஸ்தீனம் மீது கடந்த 1 வருடமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்டில் வைத்து கொல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை சரமாரியாக ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துடித்து வருகிறது. ஆனால் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே ஈரான் மீது சைபர் தாக்குதல் ஒன்றையும் இஸ்ரேல் நடத்தியது. இதில் தங்கள் அரசின் ரகசிய ஆவணகள் திருடப்பட்டகாக ஈரான் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத்துறையில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியில் [NGA] இருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில் கசிந்துள்ளது.
இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் பிரத்யேக பயிற்சி எடுத்துவரும் மற்றும் தாக்குதளுக்கு ஒத்திகை பார்க்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் ஆவணத்தில் இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த எப்படியெல்லாம் தயாராகி வருகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு வானத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
- என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு.
- வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் கடற்கரை நகரமான செசாரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்றைய தினம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்த பின்னர் இந்த தாக்குதலானது நடந்துள்ளது. டிரோன்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை அழித்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த கொலை முயற்சி குறித்து நேதன்யாகு பேசியதாவது, என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு. இது என்னையும், இஸ்ரேல் அரசையும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது என்று எச்சரித்திருந்தார்.
இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா நகரின் மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நேற்று இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இதில் மருத்துவர்கள் உட்பட குறைந்தது 73 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த 2 வாரத்தில் மட்டும் 400 பேர் வரை இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக காசா சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து லெபனானில் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லா ஆயுத்தத் தளங்களையே குறிவைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது
- பிரதமர் நேதன்யாகு குடியிருப்பு அமைந்த செசாரியா நகர் மீது தாக்குதல் நடத்தின.
டெல் அவிவ்:
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா, இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது
லெபனானில் இருந்து நேற்று ஏவப்பட்ட டிரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா நகர் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெரும் தவறு செய்துவிட்டீர்கள் என ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு கூறியதாவது:
இன்று என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஈரானின் பினாமி ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு.
இது என்னையும், இஸ்ரேல் அரசையும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது.
ஈரானுக்கும் அதன் தீமையின் அச்சில் உள்ள அதன் பினாமிகளுக்கும் சொல்கிறேன்: இஸ்ரேல் மக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளையும், அவர்களை அனுப்புபவர்களையும் ஒழிப்போம்.
எங்கள் பிணைக்கைதிகளை காசாவில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவோம். நமது வடக்கு எல்லையில் வசிக்கும் குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம்.
நமது போர் நோக்கங்கள் அனைத்தையும் அடைய இஸ்ரேல் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
- பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
- அடுத்த கட்ட போருக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்தது
பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் லெபனானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
இதனால் செசாரியா பகுதியில் நெதன்யாகு இல்லம் அமைத்துள்ள இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தின் மீது லெபனான் டிரோன் தாக்கியதாகவும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடத்த சமயத்தில் நேதன்யாகு அந்த இல்லத்தில் இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை
மேலும் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு வடக்கே உலா கிலோட் பகுதியில் இரண்டு டிரோன்கள் பறந்ததாவும் அதை அழித்ததாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலைக்கு பின்னர் புதிய மற்றும் அடுத்த கட்ட போருக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தலைவர்க்ளை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
- சின்வார் பதுங்கி இருந்த கட்டடத்தின் மீது தங்களின் பீரங்கி குண்டு வீசும் வீடியோவை இஸ்ரேல்வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக சின்வார் செயல்பட்டவர் ஆவார். இந்நிலையில் தலைவர்க்ளை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
எனவே ஹமாஸின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்கப்போகிறார் என்பதை அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் ஹமாஸ் வட்டாரங்களில் அடிபடுகின்றன. அதன்படி, யாஹ்வா சின்வாரின் இளைய சகோதரர் முகமது சின்வார் தலைவர் பட்டியலில் முதலில் உள்ளார். இவர் ஹமாஸ் ஆயுதப்படைப் பிரிவின் மூத்த கமாண்டர்களுள் ஒருவராக தற்போது செய்யப்பட்டு வருபவர் ஆவார்.
இவரைத் தவிர்த்து சின்வாரின் வலது கையாக ஹமாஸ் துணைத் தலைவர் செயல்பட்ட கலீல் அல் ஹய்யா பட்டியலில் உள்ளார். கத்தாரில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் சார்பில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியவரும் இவரே.
ஆனால் இவர் வெளியுலகுக்கு அதிகம் தெரிந்தவராகவும் வெளிநாட்டில் உள்ளதாலும் யுத்த களத்தில் இவர் செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களை தவிர்த்து 2004 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த காலெத் மஸீல் தற்போது கத்தாரில் உள்ள நிலையில் அவரும் தேர்வு பட்டியலில் உள்ளார். மேலும் ஹுஸ்மான் பாத்ரான் என்ற உயர்மட்ட தலைவரும் பட்டியலில் உள்ளார்.
யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஹமாஸ் தீவிரமாகஆலோசித்து வருகிறது. போர் முடிவுக்கு வரும் வரை இஸ்ரேல் பிணை கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று ஹமாஸ் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா தெரிவித்துள்ளார். இதற்கிடையே யாஹ்யா சின்வார் பதுங்கி இருந்த கட்டடத்தின் மீது தங்களின் பீரங்கி குண்டு வீசும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
?? ?? This is allegedly the tank shell that took the life of #Sinwar.#Israel #Gaza #Palestine #IDF #Hamas https://t.co/rsBwwuHivJ pic.twitter.com/QR3qawQqFv
— BallinOnABudget (@BudgetBallaXU) October 18, 2024
- யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்
- இந்த தாக்குதலில் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்றைய தினம் பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] மாலை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜபாலியா முகாமில் உள்ள பல்வேறு தற்காலிக குடியிருப்புகள் மீதும் வான்வழியாக வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 99,௦௦௦ பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். காசாவில் மொத்தம் 8 பெரிய அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் மிகப்பெரியது ஜபாலியா அகதிகள் முகாம் ஆகும்.
- ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
- லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இஸ்ரேல்
தற்போது அதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. சின்வார் கட்டிடம் ஒன்றில் உயிரிழந்த நிலையில் கிடக்கும் டிரோன் வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தங்களின் முக்கிய நோக்கம் நிறவெறி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
Raw footage of Yahya Sinwar's last moments: pic.twitter.com/GJGDlu7bie
— LTC Nadav Shoshani (@LTC_Shoshani) October 17, 2024
கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் வரை கொல்லப்பட்டனர். 200 பேர் வரை பணய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் பெருமபலானோர் மீட்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா உள்ளிட்ட பாலஸ்தீனியர்களை நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான்
இதற்கிடையே ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து க்கும் மேல் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியது. இதனால் எந்த நேரமும் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது.
ஹிஸ்புல்லா
இதற்கிடையே தலைவரின் மறைவால் சற்று தொய்வடைந்த ஹிஸ்புல்லா மீண்டும் தீவிரமாக இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இதுவரை நடந்த தாக்குதலில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய போர்
மேலும் தற்போது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்தும் ஹிஸ்புல்லா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலுக்கு எதிரான புதிய மற்றும் அடுத்த கட்ட போரை நோக்கி தாங்கள் முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் தலைவர் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈரான், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை இஸ்ரேலை எதிர்க்கும் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனால் ஈரானும் ஹிஸ்புல்லாவும் அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற பதற்றம் உலக அரங்கில் ஏற்பட்டுள்ளது. சிவார் கொல்லப்பட்டதை உறுதி செய்யாத ஹமாஸ், தங்கள் அமைப்பை அழைக்க முடியாது என்று மட்டும் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
- அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது.
- இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது.
ரோம்:
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேலுக்கு புகுந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரை தொடங்கியது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்தநிலையில் ஒரு ஆண்டை கடந்து போர் நீடித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது" என்றுள்ளார்.
- எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
- கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதில் ஈரானின் அணு நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கிடையே அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, `சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையேயான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் ஒரு உறுதியை அளித்துள்ளது.
ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதியளித்துள்ளது. ஈரானின் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்