என் மலர்

    நீங்கள் தேடியது "Israel"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.
    • இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் பாலஸ் தீனத்தில் உள்ள காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் வசம் உள்ள மேற்குகரை பகுதியில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் மதவழிபாட்டுத்தலம் அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 7 இஸ்ரேலியர்கள் பலியானார்கள். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

    இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா முனைபகுதியில் இன்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.

    இந்நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் ராக்கெட்டுகளை ஏவினர். சில ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் வழிமறித்து அழித்தது. தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இஸ்ரேலில் மத வழிபாட்டு தலம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் காசா முனை பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தனிநபர் பறக்கும் வாகனத்தை உருவாக்கி இருக்கிறது.
    • இந்த தனிநபர் பறக்கும் வாகனம் முழு சார்ஜ் செய்தால் 100 மைல் அதாவது 160 கிமீ வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்க செய்யும் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த வாகனம் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளின் மேல் பறந்து செல்லும் திறன் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் இந்த பறக்கும் வாகனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இஸ்ரேல் நாட்டின் AIR எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவவாக்கி இருக்கும் இந்த பறக்கும் வாகனத்தில் ஒரே சமயம் இருவர் பயணம் செய்ய முடியும். இருவரில் ஒருவர் வாகனத்தை இயக்குவார், மற்றொருவர் பயணி ஆவர். முழு சார்ஜ் செய்தால் இந்த பறக்கும் கார் 100 மைல் அதாவது 160 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    உலகில் பல்வேறு நிறுவனங்கள் இதுபோன்ற வாகனத்தை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வாகன பயன்பாட்டு முறை காலப்போக்கில் பொதுவான ஒன்றாக மாறும் என ஸ்டார்ட்அப் நிறுவனமான AIR தெரிவித்து இருக்கிறது.

    "இது மிக முக்கிய மைல்கல். நாங்கள் போக்குவரத்து முறையில் முன்னேறி இருக்கிறோம்... இதன் மூலம் AIR ONE மாடலை அதிக உற்பத்தி செய்யும் இலக்கை அடைய நெருங்கி விட்டோம்," என AIR நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராணி பைலட் தெரிவித்து இருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனிநபர்களை கடத்தி விசாரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
    • கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    தெக்ரான்:

    இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில வழக்கு தொடரப்பட்டிருந்தது. உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.
    • தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு - யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நெதன்யாகு. லிகுட் கட்சியை சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நெதன்யாகு பதவி வகித்துள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி மூலம் நெதன்யாகு பிரதமரானார். ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்ததால் நெதன்யாகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

    இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு சுமார் ஓராண்டு காலம் ஆட்சி செய்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அவரது அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப்பெற்றன. இதனால் அந்த நாட்டின் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

    இதனிடையே, அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும். இத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு - யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 120 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 85 சதவிகித வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுள்ள நிலையில், அவற்றில், 65 தொகுதிகளில் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் அவரது கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
    • காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். அதேபோல் ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலை மேற்கொண்டது.

    காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள குடிமக்களை நோக்கி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு ஹமாஸ் ராணுவ சாவடிக்குள் உள்ள ஆயுத தளத்யுதைம், ஹமாசுக்கு சொந்தமான 3 ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியது என்று கூறியது.

    மேலும் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய ராக்கெட்டுகள், இஸ்ரேலிய வான் பாதுகாப்புகளால் இடை மறிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் ஹமாஸ் இயக்கத்தில் முக்கிய தளபதி ஒருவர் பலியானார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். #Israel
    காசா நகரம்:

    அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது.  இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் இன்று ஒன்றுகூடினர்.

    வரும் ஏப்ரலில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளதால் பதற்றமான எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டன.

    போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனிய இளைஞர்களில் சிலர் இஸ்ரேல் ராணுவம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.  மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 316 பேர் காயமடைந்தனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. #Israel
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது. #Israel #Beresheet
    டெல் அவிவ்:

    சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அவற்றில் சீனா சந்திரனின் பின்புறத்தில் கடந்த ஜனவரி 3-ந்தேதி இறக்கி ஆய்வு மேற்கொண்டது.

    இந்த நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. ‘பெரிஷீட்’ எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது.

    இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது.

    இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது.

    இந்த தகவலை இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் அருகேயுள்ள யெகுட் நகரில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இது குறித்து, இஸ்ரேல் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஷ் ஐ.எல்.’ தலைவர் மோரிஸ்கான் கூறியதாவது:-

    “சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. தற்போது அதில் நாங்களும் இணைகிறோம்” என்றார்.

    இஸ்ரேல் அமெரிக்காவின் ‘நாசா’வுடன் இணைந்து இந்த விண்கலத்தை அனுப்புகிறது. இதில் வீரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை. #Israel #Beresheet
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். #PulwamaAttack #Israel #Plaestine
    ஜெருசலேம்:

    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்து உள்ளனர்.

    இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ தனது டுவிட்டர் தளத்தில், ‘அன்பு நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடிக்கு, இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சோக மயமான இந்த நேரத்தில், உங்களுக்கும், பாதுகாப்பு படையினர் மற்றும் இந்திய மக்களுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம். தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எங்கள் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

    இதைப்போல பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பயங்கரவாத தாக்குதலால் மிகுந்த ரணம் ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கும், உங்கள் மக்களுக்கும், அரசுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுடனும், உங்கள் மக்களுடனும் எங்கள் உடனிருப்பையும், கூட்டணியையும் உறுதிப்படுத்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இறைவன் இரக்கம் காட்டுவாராக’ என்று குறிப்பிட்டு இருந்தார்.  #PulwamaAttack #Israel #Plaestine 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். #Jerusalem #ScottMorrison #IsraelCapital
    சிட்னி:

    யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறி வருகிறது. 1967ல் கிழக்கு ஜெருசலேமை பிடித்ததிலிருந்தே, அது இந்நகரை தனது தலைநகராகக் கருதுகிறது. இது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதேபோல் பாலஸ்தீனர்களும் கிழக்கு ஜெருசலேமை தங்கள் தலைநகராக கருதுகிறார்கள்.

    இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை திறந்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா உள்ளிட்ட சில நாடுகளின் தூதரகமும் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.



    இந்நிலையில், மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்திருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆனால், அமைதி உடன்படிக்கை ஏற்படும்வரை தூதரகத்தை டெல்அவிவ் நகரில் இருந்து மாற்ற மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

    அமைதி உடன்படிக்கையில் கிழக்கு ஜெருசலேம் நகரின் நிலை குறித்து தீர்மானிக்கும்போது, எதிர்கால பாலஸ்தீனத்தின் நலன்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். #Jerusalem #ScottMorrison #IsraelCapital
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இஸ்ரேல் நாட்டில் இருந்து கடற்படையில் பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டு உள்ளது. #Israel #India #MissileDefense
    புதுடெல்லி:

    ஏவுகணைகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா-இஸ்ரேல் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி உள்ளன. பராக் 8 எனப்படும் இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் இரு நாட்டு படைகளிலும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    இந்த பராக் 8 குழுமத்தில் இருந்து கடற்படையில் பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டு உள்ளது. அதன்படி 7 கப்பல்களில் பொருத்துவதற்காக 777 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,600 கோடி) செலவில் ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் வாங்க இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன், மத்திய அரசின் பெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக வரும் அனைத்து அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள கப்பலுக்கு ஆற்றல் அளிக்கும் இந்த அமைப்பில், டிஜிட்டல் ராடார், லாஞ்சர்கள், இடைமறிப்பு, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் என நவீன கருவிகள் இடம்பெற்று இருக்கும்.

    இந்த ஒப்பந்தத்துக்காக பெல் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள இஸ்ரேல் நிறுவனம், இந்த ஒப்பந்தத்துடன் கடந்த சில ஆண்டுகளில் பராக் 8 தளவாடங்களுக்காக மொத்தம் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.43 ஆயிரம் கோடி) அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print