செய்திகள்
கோப்பு படம்.

மராட்டியத்தில் இன்று 67,160 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-24 16:15 GMT   |   Update On 2021-04-24 16:15 GMT
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 67 ஆயிரத்து 160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்து 28 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 67 ஆயிரத்து 160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 28 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 63 ஆயிரத்து 818 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 68 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 676 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News