செய்திகள்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.
நாக்பூர்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து வந்தது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இது கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நாக்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.