செய்திகள்
கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் புதிதாக 815 பேருக்கு கொரோனா

Published On 2021-01-06 01:49 GMT   |   Update On 2021-01-06 01:49 GMT
கர்நாடகத்தில் புதிதாக 815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 22 ஆயிரத்து 538 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 23 ஆயிரத்து 353 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 8 பேர் வைரஸ் தொற்றுக்கு இறந்தனர். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 118 ஆக அதிகரித்து உள்ளது. புதிதாக பாகல்கோட்டையில் ஒருவர், பல்லாரியில் 14 பேர், பெலகாவியில் 9 பேர், பெங்களூரு புறநகரில் 12 பேர், பெங்களூரு நகரில் 393 பேர், பீதரில் 2 பேர், சாம்ராஜ்நகரில் 5 பேர், சிக்பள்ளாப்பூரில் 29 பேர், சிக்கமகளூருவில் 25 பேர், சித்ரதுர்காவில் 6 பேர், தட்சிண கன்னடாவில் 44 பேர், தாவணகெரேயில் 4 பேர், தார்வரில் 16 பேர், கதக்கில் 4 பேர், ஹாசனில் 33 பேர், ஹாவேரியில் ஒருவர், கலபுரகியில் 24 பேர், குடகில் 8 பேர், கோலாரில் 14 பேர், கொப்பலில் 5 பேர், மண்டியாவில் 8 பேர், மைசூருவில் 57 பேர், ராய்ச்சூரில் 5 பேர், ராமநகரில் ஒருவர், சிவமொக்காவில் 14 பேர், துமகூருவில் 27 பேர், உடுப்பியில் 26 பேர், உத்தர கன்னடாவில் 15 பேர், விஜயாப்புராவில் 9 பேர், யாதகிரியில் 4 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

பெங்களூரு நகரில் 6 பேர், கலபுரகி, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் என 8 பேர் இறந்தனர். 27 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. நேற்று 1, 377 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து ஒரு ஆயிரத்து 579 ஆக உயர்ந்து உள்ளது. 9 ஆயிரத்து 637 பேர் சிகிச்சையில் உள்ளனர். 194 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

நேற்று ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு கோடியே 41 லட்சத்து 96 ஆயிரத்து 65 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News