செய்திகள்
மெட்ரோ ரெயில் பற்றி பிரதமர் மோடி கூறியதாக வைரலாகும் தகவல்
இந்தியாவின் முதல் மெட்ரோ ரெயில் சேவையை துவங்கியவர் பற்றி பிரதமர் மோடி கூறியதாக வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவின் முதல் தானியங்கி மெட்ரோ ரெயில் சேவையை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 ஆம் தேதி துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் மெட்ரோ ரெயில் சேவை துவங்கியது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியது.
இந்தியாவின் முதல் மெட்ரோ ரெயில் சேவையை முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் துவங்கி வைத்ததார் என பிரதமர் மோடி கூறியதாக பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றிய பல்வேறு பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தானியங்கி மெட்ரோ ரெயில் சேவை துவக்க விழாவில், `இந்தியாவின் முதல் மெட்ரோ ரெயில் சேவை துவங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட முயற்சிகளும் காரணம்' என பிரதமர் மோடி கூறியிருந்தார். தனது உரையில் பிரதமர் நாடு எனும் வார்த்தையை பயன்படுத்தவே இல்லை.
உண்மையில், மெட்ரோ பற்றிய பேச்சுவார்த்தை பலமுறை டெல்லியில் நடைபெற்றது. எனினும், முதல் மெட்ரோ சேவை துவங்க வாஜ்பாய் முயற்சிகள் முக்கிய காரணம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் மெட்ரோ ரெயில் சேவையை துவக்கி வைத்தது வாஜ்பாய் என தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.