search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரேந்திர மோடி"

    • மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார்
    • பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்

    சிவசேனா தேர்தல் பிரச்சார பாடலில் இருந்து 'இந்து தர்மா' மற்றும் 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதற்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடந்த வாரம், கட்சியின் பிரச்சார பாடலாக 'மஷல் கீத்' பாடலை வெளியிட்டோம். அதில் 'இந்து தர்மம்', 'ஜெய் பவானி' என்ற இரண்டு வார்த்தைகளுக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்தது. பாடலில் 'ஜெய் பவானி, ஜெய் சிவாஜி' என்ற முழக்கம் உள்ளது, இது மகாராஷ்டிரா மற்றும் மராத்தியின் பெருமை.

    மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு, மகாராஷ்டிராவின் குலதெய்வமான துல்ஜா பவானி தேவி மீது இவ்வளவு வெறுப்பு இருப்பதாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்று 'ஜெய் பவானி'யை நீக்கச் சொல்கிறார்கள், நாளை 'ஜெய் சிவாஜி'யை நீக்கச் சொல்வார்கள். இதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், "நரேந்திர மோடி கர்நாடகாவில் வாக்காளர்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கோஷமிடச் சொல்லி பின்னர் வாக்குப்பதிவு இயந்திர பொத்தானை அழுத்துமாறு கூறினார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும் என்று அமித் ஷா வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்.

    இந்த இரண்டு பேச்சுகளையும் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு நான் கடிதம் எழுதி விளக்கம் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எனவே தேர்தல் ஆணையம் இப்போது எங்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினால், அந்த ஆணையம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தவ் தாக்கரே பதில் அளித்துள்ளார். 

    • பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
    • உலகின் மிகப் பெரிய ஊழல் தேர்தல் பத்திரங்கள்.

    பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர சமூக வலைதளங்களிலும் புகைப்படம், வீடியோ, மீம்ஸ் என வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஆளும் கட்சி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களையும், பா.ஜ.க. சார்பில் காங்கிரஸ் மற்றும் எதிரக்கட்சியினருக்கு எதிரான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அப்படியாக ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான பதிவில், "சாதனை படைக்கும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், கடன் சுமை மற்றும் அரசு அடக்குமுறையால் உயிரிழக்கும் விவசாயிகள், உதவியின்றி தவிக்கும் தொழிலாளர்கள், துன்புறுத்தப்படும் வியாபாரிகள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றிலேயே பலவீனமாகி உள்ளது. உலகின் மிகப் பெரிய ஊழல் தேர்தல் பத்திரங்கள்."

    "நாம் பசியை தூண்டும் உணவை சுவைத்து விட்டோம், 2047 ஆம் ஆண்டு விருந்து சாப்பிட போகிறோம் என்று பிரதமர் மோடி மக்களிடம் கூறி வருகிறார்," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.  

    • காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.
    • கும்பாபிஷேகத்திற்கு அழைக்கவில்லை என குற்றம்சாட்டியது யார்?

    பாராளுமன்ற தேர்தல் பிரசாராத்தில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பாகற்காயின் சுவை நெய்யில் பொறித்தாலும், சர்க்கரையுடன் கலந்தாலும் மாறாது. அதுபோல தான் காங்கிரஸ் கட்சியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாராத்திற்காக முதல் முறையாக மகராஷ்டிரா மாநிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "நாட்டில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம். நக்சல், காஷ்மீர் விவகாரம் என மதத்தின் பேரில் நாடு பிளவுபட காரணம் யார்? ராமர் கோவில் கட்டுமானத்தை எதிர்த்து, ராமர் வாழ்ந்தாரா என்று கேள்வி எழுப்பியது யார்? ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கவில்லை என குற்றம்சாட்டியது யார்?" என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நாட்டில் பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. எனினும், நாட்டில் நிலவிய எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை. நக்சல் பிரச்சினை பெருமளவில் குறைந்துவிட்டது. வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகுபாடு காட்டியது. அவர்களது தேர்தல் அறிக்கையிலும் முஸ்லீம் லீக் தாக்கம் உள்ளது."

    "அவர்கள் மக்களின் எதிர்காலத்துடன் விளையாடினர். புதிய விமான நிலையமோ அல்லது இதர திட்டப் பணிகளோ வளர்ச்சி திட்டங்களுக்கு கமிஷன் வசூலிப்பதும், கமிஷன் கிடைக்காத திட்டங்களை தடுத்து நிறுத்துவதையும் செய்து வந்தனர். அவர்களின் ஒரே குறிக்கோள் - கமிஷன் வசூலிப்பது அல்லது திட்டங்களை தடுத்து நிறுத்துவது மட்டும்தான்," என்று தெரிவித்தார்.

    • தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வருகின்றனர்.
    • கடனை பெருமளவுக்கு ரத்து செய்துள்ளார்.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் பிரசாரம் மற்றும் பரப்புரை கூட்டங்கள் என வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. மறுப்பக்கம் அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகளை விமர்சித்தும், தங்களின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து வருகின்றனர்.

    அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பிரதமர் மோடி கோடீஸ்வரர்களின் கடனை பெருமளவுக்கு ரத்து செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பான பதிவில், "ஒரே சமயத்தில் சில கோடீஸ்வரர்களின் ரூ. 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். இவ்வளவு பெரிய தொகையை கொண்டு கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம்."

    "காங்கிரஸ் அறிவிக்கும் திட்டங்களுக்கு நிதி எங்குள்ளது என்று கேட்பவர்கள், இத்தகைய கணக்குகளை உங்களிடம் இருந்து மறைக்கின்றனர். நண்பர்களுக்கு கருணை காட்டுவது போதும், சாமானியர்களுக்காக அரசு கஜானாவை திறக்கும் நேரம் வந்துவிட்டது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.
    • 76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை.

    ஈரோடு:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல் களத்தை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

    இந்தியாவில் 2024-ம் ஆண்டு பாரளுமன்றத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்ய வேண்டும் என்பதற்கான தேர்தல். பா.ஜ.க. பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளார்கள்.

    2014-ம் ஆண்டு 283, 2019-ம் ஆண்டு 303 எம்.பி.க்கள் வந்த நிலையில் இந்த முறை 300 எம்.பி.க்கள் தாண்டி வர வேண்டும் என்று பாஜக உழைக்கிறது. நமது வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது இந்த தொகுதியின் அடையாளமான ஜமுக்காலத்தை போர்த்திக் கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    கிராமப்புற மக்களின் பிரச்சனை தீர்க்க வேட்பாளர் கிராமங்களில் அதிக அளவில் பிரசாரம் செய்து வருகிறார். 100 வாக்குறுதியை வேட்பாளர் கையேடு உருவாக்கி உள்ளார்.

    உலகத்தில் யாருக்கு புரோஜனம் இல்லாமல் அரசியலில் இருப்பது கம்யூனிஸ்டு கட்சிகாரர்கள் தான்.


    தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் தான் உள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள பா.ம.க., அ.ம.மு.க. ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளருக்கு உழைக்க வேண்டும். வீடு தோறும் சென்று மோடி 3-வது முறையாக வருவார் என்று சொல்ல வேண்டும்.

    வாக்காளர்கள் எது கேட்டாலும் 10 தகவல்களை சொல்ல வேண்டும். அதில் இந்திய பொருளாதார உயர்வு, 2014-ம் ஆண்டில் உலகத்தில் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு வந்தது.

    இந்திய கூட்டணி பொருளாதார வளர்ச்சி கொடுக்க முடியுமா என்று சிந்தித்து பார்க்க சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சமூக நீதி குறித்து சொல்ல வேண்டும். 76 அமைச்சர்களில் 11 பேர் பெண்கள், 12 பட்டியிலினவர்கள், 27 பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியோர் அமைச்சராக உள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 35 பேரில் 2 பெண்கள். 2 பேர் பட்டியலின பெண்கள். அவர்கள் குடும்ப கோட்டா அடிப்படையில் வந்து இருப்பார்கள். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே சமூக நீதி பின்பற்றப்படுகிறது. ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகள் தான் மோடி நம்புகிறார்.

    48 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 89,490 விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் 30 ஆயிரம் வங்கி கணக்கு வந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஆனால் மோடி சொல்லாமல் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைத்து வருகிறார்.

    பவானியில் அரசு கல்லூரி ஏன் இல்லை. ஏனென்றால் இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் தனியார் கல்லூரி நடத்துவதால் அரசு கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.

    பொருளாதாரம் சமூக நீதி அனைத்து மக்களின் வளர்ச்சி பெற மோடிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வரும் 25 ஆண்டுகளுக்கு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல்.

    2019-ம் ஆண்டு தேர்தலில் 295 தேர்தல் அறிக்கை பா.ஜ.க. கொடுத்தது. இதில் 295 அறிக்கை ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட்டது. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியோடு தி.மு.க. கம்யூனிஸ்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதனால் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து பேச நேருக்கு நேர் தயார்.

    தி.மு.க.வை பொறுத்தவரை கோபாலபுரம் வளர்ந்தால் போதும் என்று வளர்ச்சி நினைக்கிறார்கள். அதனால் வளர்ச்சி தேவை வீக்கம் தேவை இல்லை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

    தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. துபாய், ஸ்பெயின் போன்ற வெளிநாட்டுக்கு முதல்- அமைச்சர் சென்ற நிலையில் முதலீடு வரவில்லை.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு இதனால் தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். எல்லா பக்கமும் மின் கட்டணம் உயர்வு ஏற்றப்பட்டுள்ளது

    விடியல் தருகிறேன் என்று சுடுகாட்டிற்கு பாதை அமைத்து நம்மை அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள். நரேந்திர மோடி மீண்டும் நம் நாட்டின் பிரதமராக வந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும்.

    வலிமையான நாட்டை மோடி அரசு உருவாக்கி உள்ளது. தீவிரவாதம் இல்லை. குண்டு வெடிப்பு, கலவரம், வெளிநாட்டு கூலிப்படை இல்லாத வகையில் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


    ஆனால் தமிழகத்தில் பெண்கள் இரவு சுதந்திரமாக நடக்கவில்லை. ஹெல்மெட் போட்டு கொண்டு செல்கிறார். இதன் மூலம் கூலிப்படை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சட்டசபையில் சட்ட ஒழுங்கு சிரிக்கிறது.

    76 அமைச்சர்களில் அனைவரும் நேர்மையானவர்கள். குண்டூசி கூட திருடியதாக இல்லை. ஆனால் தமிழகத்தில் வேட்டி வாங்குவதில் முறைகேடு. குண்டூசி கூட விடாமல் தமிழகத்தில் ஊழல் உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 29 பைசா என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் உதயநிதி கஞ்சா உதயநிதி என்று சொல்லலாமா, கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க சென்றால் அறிவாலயம் வாசலில் வரிசையாக நிற்கிறார்கள். கஞ்சா விற்பனை கிராம தோறும் அதிகரித்து உள்ளது.

    முதல்வர் நிதிநிலை அறிக்கைக்கு கொடுத்தால் தான் கணக்கில் கொள்வோம் என்றார். ஆனால் மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் பணம் கணக்கு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். கோபாலபுரம் அனுப்பினால் தான் கணக்கு என்று சொல்கிறார்கள்.

    அரசியலை மோடி மக்கள் பக்கத்தில் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு இதுவரை எந்த பிரதமரும் கொடுக்காத அங்கீகாரத்தை மோடி கொடுத்துள்ளார்.

    மோடி சாமானிய மகனாக இருந்து உழைப்பு மூலம் வளர்ந்து வருகிறார். மேலும் சாமானிய மக்களை கண்டறிந்து கவுரவிப்பதற்காக பத்மா விருது வழங்கப்படுகிறது. மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் சாமானிய மக்கள் பற்றி மோடி பேசி வருகிறார். சாமானிய மக்களுக்கு மரியாதை செலுத்தும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள்.

    பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல்காந்தி, லல்லு பிரசாத் மகன் ஆகியோர் நான் தான் பிரதமர் என்று சொல்லி வருகிறார்கள்.

    நாட்டை ஆட்டை அறுப்பது போல நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது. இதனால் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது.

    ஒவ்வொரு வாக்குகளும் பாரத பிரதமர் மோடியை வலுப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தை அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன்.
    • திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.

    மேற்கு வங்காள பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார்

    இதன் பின்னர் பேசிய அபிஜித், "பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் என்னால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்

    மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசை அகற்றுவதற்கான அடித்தளத்தை இந்த மக்களவை தேர்தலில் உருவாக்குவதே எங்களின் பிரதான நோக்கம். மேற்கு வங்காளம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம். திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

    கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்தார்.

    இந்நிலையில் பாஜகவில் சேர்ந்த அபிஜித் வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பாஜக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

    • எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
    • நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.

    • விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பழங்குடியினரின் ஆரோக்கியத்திற்காக பல திட்டங்கள் தொடங்கினோம்.
    • கொள்ளையடித்து பிளவுபடுத்து' என்பதே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்.

    மத்தியபிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் பழங்குடியின சமூக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    "பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இந்தஆண்டு மாநிலத்திற்கு நான் வருவது இதுவே முதல் முறை. பழங்குடியினரின் ஆரோக்கியத்திற்காக பல திட்டங்கள் தொடங்கினோம்."

    "காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நேரத்தில்தான் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் நினைவுக்கு வருகிறது. தங்களின் உடனடி தோல்வியை உணர்ந்து, காங்கிரசும் அதன் கூட்டணிக்கட்சிகளும் கடைசி கட்ட தந்திரங்களை கையாண்டு வருகின்றன."

     


    "'கொள்ளையடித்து பிளவுபடுத்து' என்பதே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட இப்போது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்கள் தேர்தலில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்."

    "பாராளுமன்ற தேர்தலில் பாஜவின் 'தாமரை' சின்னம் 370க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவது உறுதி. நான் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக இதை சொல்ல வில்லை. உங்கள் சேவகனாக நான் சொல்ல இங்கு வந்து உள்ளேன்."

    "மத்திய பிரதேசத்தில் எங்களின் இரட்டை என்ஜின் அரசு இரட்டிப்பு வேகத்தில் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. 370 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற, கடந்த தேர்தலைவிட ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 வாக்குகள் கூடுதலாகபெறுவதை வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும்," என்று பேசினார்.

    • உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • இதன் கும்பாபிஷேக விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.


    சுஷ்மிதா சென் பதிவு

    இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


    பார்வதி பதிவு

    இந்நிலையில், பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது சமூக வலைதளத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நடிகை பார்வதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.


    இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பை விமர்சித்து நடிகர் கிஷோர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கோவில், மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்றுவிட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை அடக்கி வருகின்றனர்.


    கோவிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது, கோவிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது. மதமும், கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாசாரத்தின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என பதிவிட்டுள்ளார்.


    • இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள், யார் யார் என்னென்ன செய்தார்கள்.
    • எது சரித்திரத்திலேயே நிற்கிறது என கணக்கு பாருங்கள்.

    தமிழ் திரையுலகில் மூத்த இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது. இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.

    இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.


    இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா, மோடிக்கு பகவான் அந்த எழுத்தை எழுதியுள்ளார் என்றார். அவர் பேசியதாவது, இன்றைய நாள் சரித்திரத்திலேயே முதல் முறையாக, சிறப்பான நாள். ராமர் கோவில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியாப் புகழைத் தேடித் தரும்.

    யாரால் முடியும்? எல்லோராலும் செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. அவருக்கு பகவான் அந்த எழுத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள்; யார் யார் என்னென்ன செய்தார்கள். எது சரித்திரத்திலேயே நிற்கிறது என கணக்கு பாருங்கள். யார் செய்தது அதிகமாக இருக்கிறது என்றும் கணக்குப் பாருங்கள்.


    இதையெல்லாம் சொல்லும்போது என் கண்ணில் நீர் வருகிறது. இந்த நாளில் அயோத்தியில் இருக்க வேண்டிய நான்; இந்த இடத்தில் இருப்பது எனக்கு வருத்தத்தை தந்தாலும், உங்கள் முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கொஞ்சம் ஆறுதலை அளிக்கிறது" என்றார்.

    மேலும் "இந்தியாவில் எத்தனை கோவில்கள் உள்ளன; அந்தந்த கோவில்கள் எல்லாம் அந்த நேரத்தில் ஆண்ட மன்னர்கள் கட்டியதாக இருக்கும். இன்று இந்தியாவுக்கு என்று ஒரு கோவில் எழும்பி உள்ளது என்றால் அது ராமர் கோவில் தான். மன்னர்கள் கோவில்களைக் கட்டிய நிலையில், ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்காக கோவில் கட்டியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் செய்துள்ளார் என்றார்.

    ×