என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்க பொருள்"
- கச்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ் கட்சியை ஏன் விஜய் கண்டிக்கவில்லை?
- விஜய் மேடையில் பேசுவதற்கு முன்பு, கொஞ்சமாவது விஷயங்களை படிக்க வேண்டும்.
பா.ஜ.க. தலைவர் ஹெர் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா வரி விதித்துள்ளதற்கு எதிர் நடவடிக்கையாக, ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து
சுதேசிப் பொருட்களையே நாம் வாங்க வேண்டும்.
பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது பொருளாதார நடவடிக்கையால் மட்டுமே என்பதால் அமெரிக்கப் பொருட்கள் வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும்.
கச்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ் கட்சியை ஏன் விஜய் கண்டிக்கவில்லை?
விஜய் மேடையில் பேசுவதற்கு முன்பு, கொஞ்சமாவது விஷயங்களை படித்துவிட்டு பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- இந்தியாவுக்கு ஒரு சிறந்த பிரதமர் இருக்கிறார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், இந்தியா அதிக வரி விதிக்கிறது. எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய டிரம்ப், "இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். ஆனால், இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர். அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என நான் நம்புகிறேன்.
ஏப்ரல் 2-ம் தேதி அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை நாமும் அவர்களிடம் வசூலிப்போம் என தெரிவித்தார்"
இந்நிலையில், 'இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் புத்திசாலியான மனிதர்' என்று டிரம்ப் பாராட்டியுள்ளார்.
நியூ ஜெர்சிக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலினா ஹப்பாவின் பதவியேற்பு விழாவின் போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பிரதமர் மோடி சமீபத்தில் தான் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்தோம். பிரதமர் நரேந்திர மோடி மிகவும் புத்திசாலியான மனிதர். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாங்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலும் இந்தியாவுக்கு ஒரு சிறந்த பிரதமர் இருக்கிறார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.
- எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், இந்தியா அதிக வரி விதிக்கிறது. எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என தெரிவித்தார்.
டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்பால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது என சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.
ஆனால், இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர்.
அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என நான் நம்புகிறேன்.
ஏப்ரல் 2-ம் தேதி அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை நாமும் அவர்களிடம் வசூலிப்போம் என தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்சிகோ மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.
எனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக உலகளவில் கண்டனங்கள் குவிந்தன. ஆனால் அவற்றை டிரம்ப் நிராகரித்தார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் ஏற்பட்டு இருக்கிற தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி தருகிற வகையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற விவசாய பொருட்கள், இரும்பு, உருக்கு பொருட்கள் என மொத்தம் 29 பொருட்கள் மீதான வரியை அதிரடியாக இந்தியா உயர்த்தியது.
பாதாம்பருப்பு, அக்ரூட் பருப்பு உள்ளிட்டவை வரி உயர்த்தப்பட்ட பொருட்களில் அடங்கும். ஆகஸ்டு 4-ந் தேதி அமலுக்கு வர உள்ள இந்த வரி உயர்வு 241 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,638 கோடி) மதிப்பிலானது ஆகும்.
அடுத்த அடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த வரி விதிப்பு நேற்று அமலுக்கு வந்தது.
வரி விதிக்கப்படுகிற பொருட்களில் போர்போன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்டவை அடங்கும்.
இந்த வரி விதிப்பு தொடர்பாக டப்ளின் நகரில் உள்ள அயர்லாந்து நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷனர் ஜீன் கிளவுட் ஜங்கர் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “அமெரிக்காவின் வரி விதிப்பு, எல்லா தர்க்கத்துக்கும், வரலாற்றுக்கும் எதிராக அமைந்து உள்ளது. எனவே எங்களின் பதிலடி, தெளிவானது. சரியாக அளவிடப்பட்டது” என்று கூறினார்.
மேலும், “அமெரிக்க வரி விதிப்பை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம்” என்றும் கூறினார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்காக, புகையிலை, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், வேர்க்கடலை தூள் உள்ளிட்டவை அமைந்து உள்ளன. இவற்றின் மீது ஐரோப்பிய ஒன்றியம் 25 சதவீதம் வரி விதித்து உள்ளது.
மேலும், அமெரிக்க காலணிகள், துணி வகைகள், சலவை எந்திரங்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
அமெரிக்க வரி விதிப்பும், அதற்கு பதிலடி தருகிற விதத்தில் பிற நாடுகளின் வரி விதிப்பும் உலகளாவிய வர்த்தக போராக மாறுகிற ஆபத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளன. #TrumpExtraTariffs #EuropeanUnion
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரு நாடுகளும் போட்டி போட்டு பரஸ்பரம் தங்களது நாடுகள் இறக்குமதி செய்யும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிவிதிப்பை அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ நாடுகளில் தவிர மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தி வருகிறார்.
இந்த இரு வல்லரசு நாடுகளின் வர்த்தக மோதல் காரணமாக இந்தியாவும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.
அண்மையில் இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை 241 மில்லியன் டாலர்கள் அளவிற்கு(சுமார் ரூ.1,600 கோடி) அமெரிக்கா திடீரென அதிகரித்தது. இதனால் இந்தியாவிற்கு ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் குறையும் நிலை ஏற்பட்டது.
இதை ஈடுகட்டும் விதமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள், போரிக் அமிலம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 30 வித பொருட்களுக்கு இந்தியா கூடுதல் சுங்கவரியை விதிக்க முடிவு செய்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
உலகளாவிய வர்த்தகம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் 1994-ம் ஆண்டு உலக நாடுகள் இடையே செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி உலக வர்த்தக அமைப்பிடம் தெரிவிக்கப்படவேண்டும் என்பது பொதுவான விதியாகும். இதனால் மத்திய அரசு தற்போது எடுத்துள்ள சுங்க வரி உயர்வு பற்றிய தகவலை பட்டியலாக உலக வர்த்தக அமைப்பிடம் தாக்கல் செய்து உள்ளது.
இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகளை சமநிலையில் வைக்கும் விதமாக இந்த வரி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா எடுத்த நடவடிக்கையின் காரணமாக இதுபோன்ற பாதுகாப்பான பதில் நடவடிக்கையை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு. அதன்படி உலக வர்த்தக அமைப்பின் பொருட்களுக்கான வர்த்தக கவுன்சிலிடம் முறைப்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் மீதான திருத்தியமைக்கப்பட்ட வரி விகிதத்தை இந்தியா தாக்கல் செய்து இருக்கிறது. அதில் அமெரிக்காவிற்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது” என்றார்.
அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்பு, ஆப்பிள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 20 வகையான பொருட்களுக்கு 10 முதல் 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க கடந்த மாதமே மத்திய அரசு சிபாரிசு செய்து இருந்தது, நினைவு கூரத்தக்கது. #India #RaiseDuties #USProducts






