என் மலர்
நீங்கள் தேடியது "Social Media"
- உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும்.
- கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியி–ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் என்பது முற்றிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்று, அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த வகை சங்கங்கள் மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின், மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ அல்லது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ செயல்படுவது அல்ல.
எனவே பொதுமக்களும், முதலீடுதாரர்களும் மேற்படி சங்கங்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு வைப்புத்தொகையை முதலீடு செய்வது தொட–ர்பான முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் நிதி இழப்பிற்கு கூட்டுறவு அமைச்சகத்தின் மத்திய பதிவாளரோ அல்லது மாநில பதிவாளரோ இந்த வைப்பீடுகளுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. எனவே இவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என http:www.olx.in என்ற வலைதள முகவரியில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என்றும், மாத சம்பளமாக ரூ.13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுவதாகவும், சேலம், பவானி, பெருந்துறை, அவினாசி, திருப்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளதாகவும், வயது 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் எனவும், தொடர்புக்கு 82203-03402, 95970-49997 ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்ட நெசவாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த போது, இப்படி ஒரு சங்கம் கூட்டுறவுத்துறையின் கீழோ அல்லது கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழோ பதிவு செய்யப்படவில்லை என தெரியவருகிறது. 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1988-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தப்பட்ட விதிகளின்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு, முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மேலும், தற்போது வாட்ஸ் அப், இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் இதர மின்னணு ஊடகங்கள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி பயிற்சி பெற்றால் நிரந்த பணி வழங்கப்படும என போலியான விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் மட்டுமே பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு உரிய முறையில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, பணி வழங்கப்பட்டு வருகிறது. எனவே வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில், சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் போலி விளம்பரங்களை யாரும் நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியான விஷயம்.
- சோஷியல் மீடியா என்பது நீங்கள் ஒருவர் மட்டும் புழங்கும் இடம் அல்ல.
இளையதலைமுறையினரை தற்போது ஆட்டுவித்துக் கொண்டிருப்பது செல்பி மோகம். வகுப்பறை, பயணம், அலுவலகம், சுற்றுலா என எங்கு நோக்கினும் யாராவது ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டிருப்பார். ஆனால் தங்கள் பயணம் உள்ளிட்ட தங்களது செயல்களை செல்பி எடுத்து மற்றவர்களுக்கு அறிவிக்கும் இந்த செயல், செல்பி எடுக்கும்போது அருகில் உள்ளவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதாகவே உள்ளது.
குறிப்பாக நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ சுற்றுலா சென்றிருக்கையில் செல்பி எடுக்கிறேன் என்கிற பெயரில் தனியாக சுற்றித்திரிவது உடன் வந்தவர்களை வருத்தமடையச் செய்யும். மேலும் ஒரு பிரேமில் தனித்து இருக்க விரும்புவதால் நட்புகளை விட்டும் தனித்து செல்ல வேண்டியதாகிறது. செல்பி களால் பலர் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார்கள். அழகாக செல்பி எடுக்கிறேன் என்று ஆபத்தான இடங்களில் கவனமின்றி செயல்பட்டு உயிரை இழந்தவர்களும் நிறைய இருக் கிறார்கள்.
சோஷியல் மீடியா என்பது நீங்கள் ஒருவர் மட்டும் புழங்கும் இடம் அல்ல. அங்கு கோடான கோடி மக்கள் தங்கள் பொழுதை கழிக்கின்றனர். எனவே சமூக வலைத் தளத்தை பொறுத்தவரை உங்கள் செயல்களின் மீது தனிகவனம் செலுத்துங்கள். நீங்கள் பகிரும் விஷயங்கள் பிறர் மனதை புண்படுத்துவதாகவோ அல்லது வன்முறையை தூண்டுவதாகவோ இருத்தல்கூடாது. சமூகம் சார்ந்த விஷயங்களை பகிரும்போது உங்கள் கோணத்தில் சரியாகத் தெரிவது பிறரது கோணத்தில் தவறாக தோன்றலாம். அதனால் நீங்கள் பகிரும் விஷயங்கள் எந்த ஒரு பின்விளைவையும் ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும்.
முன்பெல்லாம் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு எங்காவது நீண்ட நாட்கள் செல்ல வேண்டியிருந்தால் வீட்டு வெளி கதவை பூட்டி, சாவியை அண்டை வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள். 'தினசரி அந்திசாயும்போது விளக்குபோட்டு காலை விடிந்ததும் விளக்கினை அணைத்து விடுங்கள்' என்றும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள் என்றும் கூறி தன் வீட்டினை அண்டை வீட்டாரை நம்பி ஒப் படைத்துவிட்டு செல்வார்கள். ஆனால் இப்பொழுது எங்கு செல்கிறோம், எப்போது திரும்பி வருவோம் என்று முழு விவரங் களையும் வலைத்தளத்தில் சிலர் பதிவிட்டுச் செல்கிறார்கள். இதனால் அவர்களுக்கும், அவர்களது உைடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய் விடுகிறது. இது நமக்கு நாமே ஆபத்தை உருவாக்கி கொள்வதாய் அமைந்து விடுகிறது.
சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள். அதில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் பல லட்சம் மக்களை சென்றடைகிறது. அதனால் அதை சமூகத்திற்கு தேவையான விஷயங்களை பகிர்வதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். மேலும் ஒருவர் போஸ்ட் செய்திருக்கும் தகவலை ஷேர் செய்வதற்கு முன்னால் அந்த சம்பவம் பற்றிய உண்மையை தெரிந்துகொண்டு ஷேர் செய்யுங்கள்.
ஒருவர் தனது சிறுவயது மகன் காணாமல் போனதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். சில நாட்களுக்குப் பின் அவரது மகன் அவரிடம் வந்து சேர்ந்துவிட்டான். அவன் பள்ளிக்கு சென்று கொண்டிருக்க, சிலர் அவனை அடையாளம் கண்டு மீண்டும் போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். இப்படி அடிக்கடி நடந்துகொண்டிருந்தது. அதனால் நடந்து முடிந்த விஷயங்களை 'அப்டூ டேட்' செய்துகொள்ளவேண்டும். அந்த சம்பவம் நடந்த காலத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
மேலும் சமூக வலைத்தளங்களில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற போட்டோக்களை பதிவிடாதீர்கள். அதுபோல் கவர்ச்சி, ஆபாசம் நிறைந்த போட்டோக்களையும் பதிவிட்டுவிடவேண்டாம். ஏனெனில் இன்று சமூக வலைத்தளங்களில் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உலாவருகின்றனர். அதனால் சமூகத்தை நினைத்துப்பார்த்து எதையும் பதிவிடுங்கள்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துரீதியாக மோதிக்கொள்வதை பார்க்கலாம். ஒருவர் பகிரும் ஒரு பதிவு பலருக்கு விவாதப்பொருளாகி விடுகிறது. அது போன்ற சண்டைகளை காண்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் உளவியல் ரீதியாக பிறரை வேதனைக்குள்ளாக்கும். எனவே சண்டை, வன் முறைகளை தூண்டும் விஷயங்களை பகிராமலும், அது போன்ற விஷயங்களில் பங்கெடுக்காமலும் இருங்கள். இது உங்களுக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும்.
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியான விஷயம். அதனால் அவர்கள் தங்கள் போட்டோக்களையும், உறவுப் பெண்களின் போட்டோக்களையும் பதிவிடக்கூடாது. முன்பின் அறிமுகமில்லாதவருடன் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு பெண்களின் பாதுகாப்பிற்கே ஊறுவிளைவித்துவிடும்.
- வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
- கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அது தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் சமூக வளைதலங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதேபோல அச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ் -அப் மூலமாக புதிய குழுக்களை ஆரம்பித்து, மாநில அளவில் இளைஞர்களை ஒன்றிணைத்து போராட்ட ங்களில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.





Coming Soon to @WhatsApp...
— Matt Navarra (@MattNavarra) May 21, 2019
- WhatsApp Status (Stories) to get Ads in 2020
- WhatsApp for Businesses to get richer messaging format options
- WhatsApp product catalog to be integrated with existing Facebook Business Manager catalog
h/t + 📸 @Olivier_Ptv
at #FMS19pic.twitter.com/Z5LsbADNbP


பாதுகாப்பு படைகளில் பணியாற்றுபவர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்கு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதால் அவரவர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதிகளில் முன்கூட்டியே அவர்கள் வாக்களித்துவிட்டு செல்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
தபால் ஓட்டு என்றழைக்கப்படும் இந்த வாக்குகள்தான் வாக்கு எண்ணிக்கையின் முதல்சுற்றில் எண்ணப்படும். அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வீரர், சுயேட்சை வேட்பாளரும் நடிகையுமான சுமலதாவுக்கு தான் வாக்களித்த காட்சியை செல்பியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக சிலர் தேர்தல் கமிஷனில் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதனடிப்பையில் நடவடிக்கை எடுத்த தேர்தல் கமிஷன், எண்ணிக்கையின்போது அந்நபரின் வாக்கை தள்ளுபடி செய்யுமாறு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. #LSPolls #Postalvote #CRPFSoldier #CRPFSoldierPostalvote
It's easy to express yourself by Retweeting with a comment. What if you could take it a step further and include media? Starting today, you can! Retweet with photos, a GIF, or a video to really make your reaction pop. Available on iOS, Android, and https://t.co/AzMLIfU3jB. pic.twitter.com/Oir5Hpkb2F
— Twitter Support (@TwitterSupport) May 6, 2019
