செய்திகள்
மோடியின் கொள்கைகளால் இந்தியா மந்தநிலைக்குள் தத்தளிக்கிறது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கித் தவிப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
ராகுல் காந்தி, நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை சாடி உள்ளார். “மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கித் தவிக்கிறது. பிரதமர் மோடியின் திட்டங்களே இந்தியாவின் பலத்தை வீழ்த்தி பலவீனத்தில் தள்ளியிருக்கிறது” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.6 சதவீதம் சுருங்க வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ள ஒரு அறிக்கையை ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.
ராகுல் காந்தி, நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை சாடி உள்ளார். “மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கித் தவிக்கிறது. பிரதமர் மோடியின் திட்டங்களே இந்தியாவின் பலத்தை வீழ்த்தி பலவீனத்தில் தள்ளியிருக்கிறது” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.6 சதவீதம் சுருங்க வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ள ஒரு அறிக்கையை ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.