செய்திகள்
பரிசோதிக்கும் ஊழியர்

மகாராஷ்டிராவில் மேலும் 21,029 பேருக்கு கொரோனா - 12.60 லட்சத்தை கடந்தது பாதிப்பு

Published On 2020-09-23 14:45 GMT   |   Update On 2020-09-23 14:45 GMT
மகாராஷ்டிராவில் இன்று மேலும் 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு கொரோனாவால் 479 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 479 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் மேலும் 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.63 லட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 479 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 9,56,030 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,73,477 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News