செய்திகள்
ராகுல் காந்தி

சீன ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? - ராகுல் காந்தி

Published On 2020-09-11 22:23 GMT   |   Update On 2020-09-11 22:23 GMT
சீன அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த நிலத்தை திரும்பப்பெற மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய பொருளாதாரம், கொரோனா பொதுமுடக்கம் என பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சீன அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலத்தை திரும்பப் பெற மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? அல்லது இதுவும் கடவுளின் செயல் என கைவிட முடிவு செய்யப்பட்டு விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News