செய்திகள்
கோடிக்கணக்கான வேலை இழப்புக்கு மத்திய அரசின் கொள்கைகளே காரணம் - ராகுல்காந்தி
கோடிக்கணக்கான வேலை இழப்புக்கு மத்திய அரசின் கொள்கைகளே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்
புதுடெல்லி:
வேலைவாய்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி நேற்று ஆன்லைன் பிரசாரத்தில் ஈடுபட்டது. ‘வேலைவாய்ப்புக்காக பேசுங்கள்’ என்ற அந்த பிரசாரம், காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற்றது.
அதில், காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்கேற்று தங்கள் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டனர்.
அந்த பிரசாரத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
கோடிக்கணக்கான வேலை இழப்புக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம். இந்திய இளைஞர்களின் எதிர்காலம் நசுக்கப்பட்டு விட்டது. அந்த இளைஞர்களின் குரலை மத்திய அரசு கவனிக்க வைப்போம். அதற்கு இந்த பிரசாரத்தில் பங்கேற்று எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஊரடங்கின் போதும், தளர்வுகளின்போதும் தினந்தோறும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து வருகிறார்கள். அதை பா.ஜனதா அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது. ஆனால், தேசம் அமைதியாக இருக்காது. வேலைவாய்ப்புக்காக பேசும் என்று கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி நேற்று ஆன்லைன் பிரசாரத்தில் ஈடுபட்டது. ‘வேலைவாய்ப்புக்காக பேசுங்கள்’ என்ற அந்த பிரசாரம், காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற்றது.
அதில், காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்கேற்று தங்கள் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டனர்.
அந்த பிரசாரத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
கோடிக்கணக்கான வேலை இழப்புக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம். இந்திய இளைஞர்களின் எதிர்காலம் நசுக்கப்பட்டு விட்டது. அந்த இளைஞர்களின் குரலை மத்திய அரசு கவனிக்க வைப்போம். அதற்கு இந்த பிரசாரத்தில் பங்கேற்று எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஊரடங்கின் போதும், தளர்வுகளின்போதும் தினந்தோறும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து வருகிறார்கள். அதை பா.ஜனதா அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது. ஆனால், தேசம் அமைதியாக இருக்காது. வேலைவாய்ப்புக்காக பேசும் என்று கூறப்பட்டுள்ளது.