search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை இழப்பு"

    • குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும், கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது.

    தற்போது, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால், ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

    சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல்கள் பரவுவதாகவும், அதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நடக்கின்ற அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை, தங்கள் சுயலாபத்திற்காக முடக்கும் வகையில், தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    தமிழகம் முழுவதும், முற்றிலும் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒசூா் - கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கிரானைட் தொழிற்சா லைகள் செயல்படுகின்றன.
    • ரூ. 1000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஓசூர், 

    தமிழ்நாட்டில் பல வண்ணங்கள், அமைப்பு களில் பரந்த அளவிலான கிரானைட் கற்கள் கிடைப்பதால் ஒசூா் - கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கிரானைட் தொழிற்சா லைகள் செயல்படுகின்றன.

    இத்தொழிலில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா்.

    கிரானைட் தொழிற்சா லைகள் சிறந்த முறையில் இயங்க அதன் அருகில் குவாரிகள் இருப்பதும், தரமான கிரானைட் கற்கள் எளிதில் கிடைப்பதை பொறுத்ததாகும்.

    ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான குவாரிகள் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அரசின் சட்ட சிக்கல்களால் மூடப்பட்டுள்ளன.

    இதன் விளைவாக தேவையான கிரானைட் கற்கள் கிடைக்காததால் நவீன கல் அறுப்பு இயந்திரங்கள் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே செயல்படு கின்றன. இதன் விளைவாக தொழிற்சாலைகளில் பணியாளா்கள் குறைக்கப்படு கின்றனா்.

    பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கிரானைட் தொழிற்சா லைகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் கிரானைட் கற்கள் எளிதில் கிடைக்காதலால் வெளி மாநிலங்களில் இருந்து கற்கள் வாங்குவதால் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதால் சாத்தியமில்லை.

    இந்தத் தொழில் நலிவடைந்து வருவதால் கடந்த ஓராண்டில் சுமாா் 5000 தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். பல கிரானைட் யூனிட்கள் தமிழ்நாட்டிலிருந்து ராஜஸ்தானுக்கு இடம் பெயா்கின்றன.

    இந்த இடம்பெயா்வு காரணமாக ரூ. 1000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கிரானைட் குவாரிகள் செயல்படாததாலும், கிரானைட் பதப்படுத்தும் யூனிட்கள் ஓரளவே செயல்படுவதாலும் அரசுக்கு ரூ. 5,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கிரானைட் உற்பத்தியாளா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

    ×