செய்திகள்
ராமர் கோவில் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை: காங்கிரஸ் தலைவர் கருத்து
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது என காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்டு 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டினார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா ‘‘ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது பல ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையாக இருந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை காங்கிரஸ் திறந்த மனதுடன் வரவேற்றது.
பகவான் ராமர் அனைவராலும் விரும்பப்படுபவர். அவர் எந்த அரசியல் கருத்திற்கும் மேலானவர். அரசியலையும், நம்பிக்கையையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டும்’’ என்றார்.