search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனந்த் சர்மா"

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆனந்த் சர்மா.
    • இவர் இமாச்சல பிரதேச காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர். குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரும் அதில் அடக்கம். காங்கிரஸ் கட்சியில் ஆனந்த் சர்மா பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவராக முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அக்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள ஆனந்த் சர்மா, கட்சிக் கூட்டங்கள் தொடர்பாக தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை, அழைக்கவும் இல்லை. இதனால் எனது சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. இதனால் இமாச்சல பிரதேச காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், இருப்பினும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் எனக்கூறியுள்ளார்.

    ஏற்கனவே, ஜம்மு காஷ்மீர் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • நட்டாவுடனான சந்திப்புக்கு அரசியல் முக்கியத்தும் எதுவும் கிடையாது.
    • நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வந்துள்ளோம்.

    டெல்லி

    காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய G-23 குழுவை சேர்ந்தவர் ஆனந்த் சர்மா. இவர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து ஆனந்த் சர்மா கூறியுள்ளதாவது: நட்டாவை சந்திக்க தமக்கு முழு உரிமை உண்டு. அவரை சந்திக்க வேண்டும் என்றால் வெளிப்படையாகவே சந்திப்பேன். இதில் அரசியல் முக்கியத்தும் எதுவும் கிடையாது.

    நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வருகிறோம். கருத்து ரீதியாக எதிப்பாளராக இருப்பதால் எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பகை இருப்பதாக அர்த்தமில்லை. நட்டாவுடன் எனக்கு சமூக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் உறவுகள் உள்ளன. இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

    எனது மாநிலம் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த ஒருவர் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பதில் நான் பெருமைப் படுகிறேன். ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் என்னையும், நட்டாவையும் பாராட்ட அழைப்பு விடுத்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே நட்டாவை ஆனந்த் சர்மா சந்திக்கவில்லை என்றும், தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×