செய்திகள்
பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தும் வீரர்கள் (கோப்பு படம்)

காஷ்மீர் என்கவுண்டர் -2 பயங்கரவாதிகளை வீழ்த்தியது பாதுகாப்பு படை

Published On 2020-06-25 04:12 GMT   |   Update On 2020-06-25 04:12 GMT
வடக்கு காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்த கூட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில், நாசவேலைகளுக்கு சதித்திட்டம் தீட்டிய பல்வேறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு காஷ்மீரின் சோபோர் மாவட்டம் ஹர்த்சிவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அப்பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. 

தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News