செய்திகள்
சாலை விபத்து

ஆந்திராவில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி

Published On 2020-06-17 13:15 GMT   |   Update On 2020-06-17 13:15 GMT
ஆந்திராவில் டிராக்டர் மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதிய கோர விபத்தில் கோவிலுக்குச் சென்று திரும்பிய 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திராவில் டிராக்டர் மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதிய கோர விபத்தில் கோவிலுக்குச் சென்று திரும்பிய 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மன் மாவட்டத்தின் கோபாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா மாநிலம் வேதாத்ரி என்ற இடத்தில் உள்ள நரசிம்மா சாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வேதாத்ரி அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிரெய்லர் துண்டிக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News