செய்திகள்
வேட்புமனு தாக்கல் செய்த ஜோதிராதித்ய சிந்தியா

மாநிலங்களவை தேர்தல் - ஜோதிராதித்ய சிந்தியா வேட்பு மனுதாக்கல் செய்தார்

Published On 2020-03-13 10:06 GMT   |   Update On 2020-03-13 10:06 GMT
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜோதிராதித்ய சிந்தியா வேட்புமனு தாக்கல் செய்தார்.
போபால்:

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகி ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, சிந்தியா பாஜகவில் இணைவார் என தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், ஜோதிராதித்யா அக்கட்சியில் இணைந்தார். 
அக்கட்சியில் சேர்ந்த சில மணி நேரங்களில் மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களை தேர்தல் வேட்பாளராக ஜோதிராதித்யா சிந்தியாவை அக்கட்சி தலைமை அறிவித்தது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜோதிராதித்ய சிந்தியா இன்று மதியம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது முன்னாள் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் உடனிருந்தார்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News