செய்திகள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2020-03-09 07:58 GMT   |   Update On 2020-03-09 08:26 GMT
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள கவ்ஜபோரா ரெபன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

இதையடுத்து சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்பகுதியில் மேலும் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

என் கவுண்டரில் கொல்லப்பட்டுள்ள பயங்கரவாதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News