செய்திகள்
ரோந்து செல்லும் பாதுகாப்பு படையினர்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - சிறப்பு போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் பலி

Published On 2020-03-04 16:37 GMT   |   Update On 2020-03-04 16:37 GMT
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். மேலும், பொதுமக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தார்.

தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்து விட்டனர்.

இதையடுத்து, அப்பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News